பக்கம் எண் :

கனகமாலையார் இலம்பகம் 995 

அழகிய ஒலியையுடைய யாழைப் பண்ணி; மாண்ட கோல் தடவ - அதன் சிறந்த நரம்புகளை இசைப்பதற்கு; அணிமுலைத் தடத்தின் ஒற்றி வெப்பரால் தட்பம் மாற்றி - அழகிய முலைகளிலே ஒற்றி முலைவெப்பத்தால் யாழின் குளிர்ச்சியை நீக்கி; கீதம் பாட யான் பெரிதும் பேது உற்று - இசையைப் பாட யான் பெரிதும் வருந்தி; இணைமலர்க் கண்ணிக்கு ஒவ்வா இளிவரு கிளவி சொன்னேன் - இணைந்த மலரனைய கண்ணிக்குத் தகாத இழிமொழியை உரைத்தேன்.

   (வி - ம்.) மாண்ட கோல் - மாட்சிமையுடைய யாழ் நரம்பு. தடவ - வருட. மாதர் அவள் எனச் சுட்டு மாத்திரையாய் நின்றது. வெப்பர் - வெப்பம். தட்பம் - குளிர்ச்சி, ஈண்டுத் தளர்ச்சி, என்பது படநின்றது. கீதம் - இசை. இளிவரு கிளவி என்றது. அறியலென் கொழுநன் மாய்ந்தால் அணி சுமந்து இருப்பது என்று கூறியதனை - (1706).

( 190 )
1747 சொல்லிய வென்னை நோக்கித்
  துளங்கனும் மடிகள் பாதம்
புல்லயான் புணர்ப்ப லென்று
  பொழுதுபோய்ப் பட்ட பின்றை
யெல்லிருள் விஞ்சை யோதி
  யிவ்வழி யிடுவித் திட்டாள்
சொல்லுமி னடிக ணீரும்
  போந்தவா றெனக்கு மென்றான்.

   (இ - ள்.) சொல்லிய என்னை நோக்கி - இழிமொழியுரைத்த என்னைப் பார்த்து; துளங்கல் - வருந்தாதே; நும் அடிகள் பாதம் புல்ல யான் புணர்ப்பல் - நும் தலைவருடைய திருவடிகளைத் தழுவ, யான் கூட்டுவேன்; என்று - என்று கூறி; பொழுது போய்ப் பட்ட பின்றை - ஞாயிறுபோய் மறைந்த பிறகு; எல் இருள் விஞ்சை ஓதி - விடியற்கால இருளிலே மறைமொழியினை முறையுறக் கணித்து; இவ்வழி இடுவித்திட்டாள் - இவ்விடத்தே விடச் செய்தனள்; அடிகள் நீரும் போந்தவாறு எனக்கும் சொல்லுமின் என்றான் - அடிகளே! இனி நீர் வந்தவாற்றையும் எனக்குக் கூறுமின் என்றான்.

   (வி - ம்.) காளையீதுரைக்கின்றவன் (சீவக. 1732) இடுவித் திட்டாள் என்றுரைத்தான் என முடிக்க.

( 191 )
1748 தாதையா ருவப்பச் செய்வான்
  றாழ்கச்சிற் பிணிப்புண் டைய
போதரா நின்ற போழ்திற்
  போர்ப்புலிக் குழாத்திற் சீறிக்