கனகமாலையார் இலம்பகம் |
997 |
|
|
(சீவக. 1731) என்றதற்கு, 'நீ அப் புலித்திரளுக்குச் சிங்கம்' என்றான் என்க. 'விண்டுவும்' என வகரவுடம்படுமெய் பெற்றது விகாரம். 'விண்டும்' என வருதல் வேண்டும்.
|
( 193 ) |
1750 |
சினந்தலைப் பெருக்கித் தீக்கோ | |
|
ளுறுப்பினைச் சுருக்கித் தீப்போ | |
|
லனன்றுநில் லாத கண்ணா | |
|
னிறுத்தின செவியிற் றாகி | |
|
முனம்புக வடக்கிப் பின்போந் | |
|
திருந்துபாய் வான மைந்த | |
|
வினந்தலைப் புலியோ டொக்குந் | |
|
தோழர்நின் னிடத்திற் கண்டேன். | |
|
(இ - ள்.) சினம் தலைப்பெருக்கி - சினத்தைத் தம்மிடத்தே வளர்த்து; தீக்கோள் உறுப்பினைச் சுருக்கி - தீக்கோட்பாட்டையுடைய உறுப்புக்களைச் சுருக்கி; தீப்போல் அனன்று நில்லாத கண்ணால் - தீயைப்போல் அழன்று சுழல்கின்ற கண்ணுடன்; நிறுத்தின செவியிற்று ஆகி - நேரே நிறுத்தின காதுகளை உடையதாய்; அடக்கி - உடம்பினைக் குறைத்து; பின்போந்திருந்து - பின்னே சென்றிருந்து; முனம் புகப் பாய்வான் அமைந்த - முன்னே செல்லப் பாய்தற்கிருந்த; இனந்தலைப் புலியோடொக்கும் - கூட்டத்தை இடத்தே கொண்ட புலியோடு ஒப்பாகிய; தோழர் நின்னிடத்தில் கண்டேன் - தோழரை நின்னிடத்தே கண்டேன்.
|
(வி - ம்.) தீக்கோள் உறுப்பு - தீய கோட்பாட்டினையுடைய உறுப்புக்கள். நில்லாத என்பது சுழற்சியுடைய என்னும் பொருள்பட நின்றது. கண்ணான் என்புழி ஆன் உருபு ஒடு உருபின் பொருட்டு. செவியிற்று - செவியினையுடைத்து . இனம் - கூட்டம்.
|
( 194 ) |
1751 |
கூடநீர் நின்ற பெற்றி | |
|
கண்டிப்பா னோக்கு வேற்கொர் | |
|
கேடகம் வாளொ டேந்திக் | |
|
கெடுகவிந் நகர மென்னா | |
|
மாடத்தி னுச்சி நின்ற | |
|
மலைமக டன்மை கண்டே | |
|
யாடவர்க் குழுவை யொப்பா | |
|
யஞ்சினே னதன்க ணென்றான். | |
|
(இ - ள்.) நீர்கூட நின்ற பெற்றி கண்டு இப்பால் நோக்குவேற்கு - நீர் அங்ஙனம் சேர நின்ற தன்மை கண்டு (தந்தையார்
|