நல் நீர்ச்
சிறை இலா நகரம் - நல்ல நீர்நிலைகள் இல்லாத நகரமும்;
போலும் - போன்று சிறிதும் பயனற்றதாகும் என்பதாம்.
(வி
- ம்.) சேய் மகவு. சேயிலாச் செல்வம் பொறையிலா
அறிவு
முதலியவற்றைப் போன்று பயனற்றதாம் என்றவாறு.
போகம் - இன்பம். புணர்வு - காதலர்க் கூட்டரவு. வனசம் - தாமரை.
ஆடையுடாது அணிகள் மட்டும் அணியப்பட்ட கோலம் என்க. கோலம் -
ஒப்பனை. நறை - மணம். கல்வி நலமிலாப் புலமை என்றது,
இயற்கையினமைந்த நுண்மாணுழை புலத்தினை.
“கல்லாதான் ஓட்பம் கழியநன் றாயினும்
கொள்ளா ரறிவுடை யார்” --குறள், 404
என்புழி வள்ளுவர் ‘ஒட்பம்’ என்பதுமது.
இனி, இதனோடு--
“படைப்புப்பல படைத்துப் பலரோ டுண்ணும்
உடைப்பெருஞ் செல்வ ராயினு மிடைப்படக்
குறுகுறு நடந்து சிறுகை நீட்டி
இட்டுத் தொட்டுங் கல்வியுந் துழந்தும்
நெய்யுடை யடிசில் மெய்பட விதிர்த்தும்
மயக்குறு மக்களை யில்லோர்க்குப்
பயக்குறை யில்லைத் தாம்வாழு நாளே” --புறநா, 188
எனவரும் பாண்டியன் அறிவுடைநம்பி அருமைச் செய்யுளும்,
“பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ-இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லா தவர்” --நளவெண்பா, 241
எனவரும் புகழேந்தியார் பொன்மொழியும்,
“கற்புடுத் தன்பு முடித்துநாண் மெய்ப்பூசி
நற்குண நற்செய்கை பூண்டாட்கு-மக்கட்பே
றென்பதோர் செல்வமு முண்டாயி னில்லன்றே
கொண்டாற்குச் செய்தவம் வேறு” --நீதிநெறி, 81
எனவரும் குமர குருபரவடிகளார் அருண்மொழியும்,
“மங்கல மென்ப மனைமாட்சி மற்றதன்
நன்கல நன்மக்கட் பேறு” --குறள், 90
வ. - 2
|