எனவரும்
பொய்யில் புலவன் பொருளுரையும் நினைவிற் கொள்ளற்
பாலன. (12)
13.
|
அடக்கமுடைமை
ஆக்கப் படுக்கு மருந்தளைவாய்ப் பெய்விக்கும் |
|
போக்கப்
படுக்கும் புலைநரகத் துய்விக்கும்
காக்கப் படுவன விந்திரிய மைந்தினும்
நாக்கல்ல தில்லை நனிபேணு மாறே. |
(இ
- ள்.) ஆக்கப் படுக்கும் - ஒருவனுடைய நாவினிற்றோன்றுஞ்
சொல் அவனைச் செல்வ முதலிய பேறுகள் உடையவனாக உயர்த்தவும்
உயர்த்தும்; அருந்தளைவாய்ப் பெய்விக்கும் - அல்லது உய்தற்கரிய
சிறைக்கோட்டத்துட் செலுத்தினும் செலுத்தும்; போக்கப் படுக்கும் -
அங்ஙனமே இன்ப வாழ்க்கைக் கிடமாகிய போகபூமியுட் பிறப்பித்தலும்
செய்யும்; புலை நரகத்து உய்விக்கும் - அல்லது இழிவுடைய நரகத்தின் கண்
செலுத்தினுஞ் செலுத்தும்; காக்கப்படுவன - ஆதலால் மாந்தர் தம்மறிவாற்
காத்தற் குரியனவாகிய இந்திரியம் ஐந்தினும் - பொறிகள் ஐந்துனுள்ளும்; நனி
பேணும் ஆறு - மிகவும் விழிப்புடனிருந்து பாதுகாத்துக் கொள்ளும்படி;
நாக்கு அல்லது இல்லை - நாவினையன்றிப் பிறிதொன்றில்லை, என்பதாம்.
(வி - ம்.) மக்கட்கு
ஆக்கந்தருவதும் நாவே. அவரைச்
சிறைக்கோட்டம் புகுவிப்பதும் அதுவே; துறக்கத்துச் செலுத்துவதும் அதுவே,
நரகத்தில் வீழ்த்துவதும் அதுவே ஆதலால், மெய் முதலிய பொறிகளுள்
நாவே பெரிதும் விழிப்புடன் பேணற் பாலது என்றவாறு.
“யாகாவா ராயினு நாகாக்க காவாக்காற்
சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு” --குறள், 127
என வரும் திருக்குறளும் நோக்குக.
“நாநல மென்னு நலனுடைமை யந்நலம்
யாநலத் துள்ளதூஉ மன்று” --குறள், 941.
எனவும்,
“ஆக்கமுங் கேடு மதனால் வருதலாற்
காத்தோம்பல் சொல்லின்கட் சோர்வு” --குறள், 942.
எனவும்,
“திறன்அறிந்து சொல்லுக சொல்லை யறனும்
பொருளு மதனினூஉங் கில்” --குறள், 944,
எனவும் வரும் அப்பொய்யில் புலவர் பொருளுரையும் காண்க.
|