“எள்ளாமை
வேண்டுவா னென்பா னெனைத்தொன்றுங்
கள்ளாமை காக்கதன் னெஞ்சு” --குறள், 281
எனவும்,
“உள்ளத்தா லுள்ளலுந் தீதே பிறன்பொருளைக்
கள்ளத்தாற் கள்வே மெனல்” --குறள், 282
எனவும் வரும் குறள் முதலியவற்றானு முணர்க. கொலை கூடி வரும்
அறம் கொள்ளன்மின் என்பதனை,
“அறவினை யாதெனிற் கொல்லாமை கோறல்
பிறவினை யெல்லாந் தரும்” --குறள், 328
எனவும்,
“அவிசொரித் தாயிரம் வேட்டலி னொன்ற
னுயிர்செகுத் துண்ணாமை நன்று” --குறள், 259
எனவும் வருத் திருக்குறள்களானும்,
“கொலையற மாமெனும் கொடுந்தொழின் மாக்கள்
அவலப் படிற்றுரை” (மணி - 9 - 62 - 3)
எனவரும் மணிமேகலையானும், ஏனையவற்றை முற்கூறிப் போந்த
மேற்கோள்களானு முணர்க (17)
18. |
உண்டி
கொடுத்தலின் உயர்வு
துற்றுள வாகத் தொகுத்து விரல்வைத்த |
|
தெற்றுக்
கஃதென்னி னிதுவதன் காரணம்
அற்றமில் தான மெனைப்பல வாயினும் துற்றவிழ்
ஒவ்வாத் துணிவென்னு மாறே. |
(இ
- ள்.) துற்று உளவாகத் தொகுத்து விரல்வைத்தது
- (துறவியாகிய)
நான். சோற்றினை மிகுதியாக ஏற்றுக் கையிலேந்தி வருதல் கண்டு;
அஃதெற்றுக்கெனின் - அங்ஙனம் செய்வதற்குக் காரணம் என்னையோ? இ
என்பாயாயின், அற்றம் இல் தானம் எனைப்பல ஆயினும்- குற்றமில்லாத
தானப் பொருள்கள் எத்துணையும் பலவாயவிடத்தும்; துற்று அவிழ் ஒவ்வாத்
துணிவு என்னும் ஆறே-அவையெல்லாம்
உண்ணும் சோற்றிற்கு நிகராகா
என்பது தெளிவான முடிவு. இது அதன் காரணம் - இதுவே அங்ஙனம்
செய்தற்குக் காரணமாம் என்பதாம்.
(வி - ம்.) வளையாபதி
என்னும் பெருங்காப்பியங் கூறும்
கதையினையாம் சிறிது மறிகின்றிலேம் ஆயினும் இச் செய்யுள் யார் கூற்று
எந்தச் செவ்வியிற் கூறப்பட்டிருக்கலாம் என்று ஊகித்துணர்ந்து இங்ஙனம்
உரை கூறினாம்.
|