ஆக்குமுடி கவித்தரசாண் டவர்களரி வையரோ
டனுபவித்தங் கிருத்திடினு மகப்பற்றற் றிருப்பர்
நோக்கியிது புரியாதோர் புறப்பற்றற் றாலு
நுழைவர்பிறப் பினின்வினை கள்துங்கி டாவே”
எனவும் வருகின்ற சிவஞான சித்தியார் (287) முதலியவற்றாலும்,
உணர்க.
(24)
25. |
இதுவுமது
தவத்தின் மேலுறை தவத்திறை தனக்கல தரிதே |
|
மயக்குநீங்குதல்
மனமொழி யொடுமெயில் செறிதல்
உவத்தல் காய்தலொ டிலாதுபல் வகையுயிர்க்
கருளை நயத்து நீங்குதல் பொருடனை யனையது மறிநீ. |
(இ
- ள்.) தவத்தின்மேல் உறை - தவவொழுக்கத்தின் மட்டுமே நின்று
உயிர் வாழ்தல் ; தவத்து இறை தனக்கு அலகு அரிது -
அத்தவவொழுக்கத்திற் கெல்லாம் தலைவனாயிருக்கின்ற அருகக்
கடவுளுக்குக் கைகூடுவதல்லது நம்மனோர்க்கு மிகவும் அரியதொரு
செயலேயாகும் ; ஆயினும், நம்மனோர்க்குத் தவமாவது ; மயக்கு நீங்குதல -
மயக்கம் நீங்கிப் பொருளியல் புணர்தலும்; மனம் மொழியொடு மெயில்
செறிதல் - மனமும் மொழியும் உடம்புமாகிய மூன்று கருவிகளையும் அடக்கி
அறமாகிய சிறைக் கோட்டத்தின் கண்ணிருத்தல்; உவத்தல் காய்தலொடு
இலாது- விரும்புதலும் வெறுத்தலுமாகிய குணங்களோடிராமல்; பல்வகை
உயிர்க்கு அருளை நயந்து-பல்வேறு வகைப்பட்ட உயிரினங்களிடத்தும்
அருள் கூர்தலையே விரும்பி; பொருள் தனை நீங்குதல் - பொய்ப்
பொருள்களின்பாற் பற்றுவையாது ஒழிதல்; அனைத்தும் நீ அறி - ஆகிய
இவற்றை மேற்கோடலே யாம். அத்தவத்தினையும் நீ நன்குணர்ந்து கொள்ளக்
கடவை! என்பதாம்.
(வி
- ம்.) தவம் செயற்கரிய தொன்றெனக் கருதி அதனை
விட்டுவிட வேண்டா! தவத்தோர்க்குக் கூறப்பட்ட முழுவிலக்கணங்களும்
தவத்தோர்க்கெல்லாம் இறைவனாகிய அருகக் கடவுளுக்கே பொருந்துவதாம்.
ஆயினும், அஃது அருமையுடையத்தென்று அசாஅவாமை வேண்டும்.
அத்தவம் நம்மனோர் ஆற்றுமளவிற்கு எளியதூஉமாம். அஃதாவது--
பொருளல்லவற்றைப் பொருளாகக் கருதும் மயக்கம் நீங்குதலும்,
மனமொழி மெய்களை அடக்கித் தீதொரீஇ நன்றின்பாலுய்த்தலும், விருப்பு
வெறுப்பற்றிருத்தலும், பொய்ப் பொருள்களைப் பற்றிக் கிடவாமையும்,
எவ்வுயிர்க்கும் அருளுடையராயிருத்தலும் ஆகிய இவ்வொழுக்கமே
நம்மனோர்க்குத் தவமாம். ஆதலால் இவற்றை மேற்கோடல் யாவர்க்கும்
கூடும் அன்றோ என்றவாறு.
|