பக்கம் எண் :

36

வற்றை ; நிரலே,

        “பொருளல்ல வற்றைப் பொருளென் றுணரும்
         மருளானா மாணாப் பிறப்பு”
              --குறள், 351

எனவும்,

        “இருணீங்கி இன்பம் பயக்கு மருணீங்கி
         மாசறு காட்சி யவர்க்கு”  
                --குறள், 352

எனவும்,
 
        “அடல்வேண்டு மைந்தன் புலத்தை விடல்வேண்டும்
         வேண்டிய வெல்லா மொருங்கு”
           --குறள், 343

எனவும்,

        “நன்றாங்கா னல்லவாக் காண்பவ ரன்றாங்கா
         லல்லற் படுவ தெவன்”  
                --குறள், 371

எனவும்,

        “வகுத்தான் வகுத்த வகையல்லாற் கோடி
         தொகுத்தார்க்குந் துய்த்த லரிது”
           --குறள், 377

எனவும்; (குறிப்பு-இவ்விரண்டும் விரும்பு வெறுப்பினீங்கற்கு
வேண்டுவன)

        “அருளில்லார்க் கவ்வுலக மில்லை பொருளில்லார்க்கு
         இவ்வுலக மில்லாகி யாங்கு”
              --குறள், 347

எனவும் வரும் திருக்குறள்களானுமுணர்க.                   (25)


26.          இணைவிழைச்சு

எண்ணின்றி யேதுணியு மெவ்வழி யானு மோடும்
  உண்ணின்று ருக்கு முரவோருரை கோட லின்றாம்
நண்ணின்றி யேயு நயவாரை நயந்து நிற்குங்
கண்ணின்று காம நனிகாமுறு வாரை வீழ்க்கும்.

     (இ - ள்.) காமம்-காமமானது; எண் இன்றியே துணியும் - ஆராய்தல்
சிறிது மின்றியே செயல் செய்யத் துணியும் ; எவ்வழி யானும் ஓடும் - நல்வழி
தீயவழி என்று நாடுதலின்றி எந்தவழியினும் விரைந்து செல்லும் ; உள் நின்று
உருக்கும்-தான் விரும்பியவாறு இன்பந் துயத்தற்கிடையூறு நேர்ந்தவிடத்து
நெஞ்சத்தின் கண்ணின்று நலிந்து உள்ளத்தையும் உடம்பினையும்
மெலிவிக்கும் ;உரவோர் உரைகோடல் இன்று ஆம் - அறிஞர் கூறும்
அறவுரைகளைச் சிறிதும் பேணுதலும் இல்லையாகும் ; நண்ணின்றியேயும் -