பக்கம் எண் :

40

            “ஏறிய மடற்றிறம் இளமை தீர்திறம்
             தேறுதல் ஒழிந்த காமத்து மிகுதிறம்
             மிக்க காமத்து மிடலொடு தொகைஇச்
             செப்பிய நான்கும் பெருந்திணைக் குறிப்பே”

                                    --தொல் - அகத் - 51

எனவும்,

           “மடன்மா கூறும் இடனுமா ருண்டே” - ஷை களவி - 11

எனவும் வருந் தொல்காப்பியத்தானும்,
          
           “சான்றவிர் வாழியோ சான்றவி ரென்றும்
            பிறர்நோயுத் தந்நோய்போற் போற்றி யறனறிதல்
            சான்றவர்க் கெல்லாங் கடனானா லிவ்விருந்த
            சான்றீர் நுமக்கொன் றறிவுறுப்பெண் மன்ற
            துளியிடை மின்னுப்போற் றோன்றி யொருத்தி
            யொளியோ டுருவென்னைக் காட்டி யளியளென்
            னெஞ்சாறு கொண்டா ளதற்கொண்டு துஞ்சே
            னணியலங் காவிரைப் பூவோ டெருக்கின்
            பிணையலங் கண்ணி மிலைந்து மணியார்ப்ப
            வோங்கிரும் பெண்ணை மடலூர்ந்தென் னெவ்வநோய்
            தாங்குத றேற்றா விடும்பைக் குயிர்ப்பாக
            வீங்கிழை மாதர் திறத்தொன்று நீங்காது
            பாடுவென் பாய்மா நிறுத்து;
            யாமத்து மெல்லையு மெவ்வத் திரையலைப்ப
            மாமேலே னென்று மடல்புணையா நீந்துவேன்
            றேமொழி மாத ருறாஅ துறீஇய
            காமக் கடலகப் பட்டு;
            உய்யா வருநோய்க் குயலாகு மைய
            லுறீஇயா வீத்தவிம் மா;
            காணுந ரெள்ளக் கலங்கித் தலைவந்தெ
            னாணெழின் முற்றி யுடைத்துள் ளழிந்தரு
            மாணிழை மாதரா ளேஎரெனக் காமன
            தாணையால் வந்த படை;
            காமக் கடும்பகையிற் றோன்றினேற் கேம
            மெழினுத லீத்தவிம் மா;