“தந்தலம்
பாரிப்பார் தோயார் தகைசெருக்கிப்
புன்னலம் பாரிப்பார் தோள்” --குறள்,
916
எனவும்,
“நிறைநெஞ்ச மில்லவர் தோய்வர் பிறநெஞ்சிற்
பேணிப் புணர்பவர் தோள்” --குறள், 917
எனவும் வருந் திருக்குறள்களான் உணர்க.
அக நலமாகிய அன்புடைமையும் கற்புடைமையு மின்மை தோன்ற
“புரிவளை முன்கைப் புனையிழையார்” எனப் புறநலத்தையே விதந்தெடுத்
தோதினர். (30)
31.
|
கள்ளாமை
பீடில் செய்திக ளாற்கள விற்பிறர் |
|
வீடில்
பல்பொருள் கொண்ட பயனெனக்
கூடிக் காலொடு கைகளைப் பற்றிவைத் தோட லின்றி
யுலையக் குறைக்குமே. |
(இ
- ள்.) களவில் - மறைவாக; பிறர் வீடு இல் பல்பொருள் -
பிறமாந்தர் கைவிடுதலில்லாத பல்வேறு பொருள்களையும்; பீடு இல்
செய்தியில்- பெருமையில்லாத கன்னமிடுதல் முதலிய தொழில்களாலே;
கொண்ட பயன் என - நீ களவுகொண்டதன் பயன் இஃதேயாம் என்று
சொல்லி; பற்றி - செங்கோன் மன்னவன் கள்வரைத் தன் மறவர்களால்
பிடிப்பித்து; ஓடல் இன்றி காலொடு கைகளைக் கூடி - தப்பி ஓடிவிடாதபடி
அவர்தம் கால்களையும் கைகளையும் கூட்டித் தளையிட்டு; உலையக்
குறைக்கும் - அவர் நெஞ்சம் பதறும்படி துணிப்பன், என்பதாம்.
(வி
- ம்.) களவுசெய்யுங் குற்றத்திற்குக் கைகால்களைக் குறைத்துக்
கொல்லுதல் பழையகாலத்து மன்னர் வழக்கம். இதனைச் சிலப்பதிகாரத்தாலும்
உணர்க. இனி, வள்ளுவனார்,
“கள்வார்க்குத் தள்ளு முயிர்நிலை கள்ளார்க்குத்
தள்ளாது புத்தே ளுலகு” --குறள், 29
என்றோதுந் திருக்குறளாலும் பண்டு கள்வரைக் கொல்லுதலே தக்க
வொறுப்பென அரசர் கருதிய துணரலாம். மேலும் இக்குறளானும் களவினால்
வரும் கேடுணர்க. “கள்வனைக் கோறல் கடுங்கோலன்று; வெள்வேற்
கொற்றம்” என்பது பாண்டியன் நெடுஞ்செழியன் கூற்று. (சிலப் - வழக்குரை
- 94 - 5.)
|