“இற்பிறந்தார்
கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்” --குறள், 1044
எனவும்,
“இல்லாரை யெல்லாரு மெள்ளுவர் செல்வரை
யெல்லாருஞ் செய்வர் சிறப்பு” --குறள், 752
எனவும்
வருந் திருக்குறள்களானும், மன்னல் சிறிதாகி என்பதனை,
“அற்கா வியல்பிற்றுச் செல்வ மதுபெற்றா
லற்குப வாங்கே செயல்” --குறள், 333
எனவரும்
திருக்குறளானும் உணர்க. ‘துறவோவிழுமிது’ என்பதனை,
“ஒழுக்கத்து
நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு” --குறள், 21
எனவும்,
“துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்
திறந்தாரை யெண்ணிக்கொண் டற்று” --குறள், 22
எனவும்,
“இருமை வகைதெரிந் தீண்டறம் பூண்டார்
பெருமை பிறங்கிற் றுலகு” --குறள், 23
எனவும்
வருந் திருக்குறள்களானு முணர்க. (37)
38. |
இதுவுமது
ஈண்ட லரிதாய்க் கெடுத லெளிதாகி |
|
நாண்ட லரிதாய் நடுக்கம் பலதரூஉ
மாண்பி லியற்கை மருவி லரும்பொருளை வேண்டா தொழிந்தார்
விறலோ விழுமிதே. |
(இ
- ள்.) ஈண்டல் அரிது ஆய் - வந்து சேருவது மிகவும்
அரியதாகி;
கெடுதல் எளிதாகி-அழிந்துபோவத மிகவும் எளியது ஆகி; நாண்டல் அரிதாய்
- நிலைப்பித்துக் கோடலும் அரிதாகி; நடுக்கம் பல தரூஉம் பலவேறு
துன்பங்களையும் தருகின்ற, மாண்பு இல் இயற்கை -
மாட்சிமையில்லாமையையே இயல்பாக உடைய; மருவு இல் -பொருத்தமற்ற;
அரும்பொருளை - பெறுதற்கரிய இவ்வுலகப் பொருள்களை: வேண்டாது
ஒழித்தார் - விரும்பாது துறந்த சான்றோருடைய; விறல் - வெற்றியே;
விழுமிது-உலகின் கண் பெறக்கிடந்த வெற்றிகளுள் வைத்துக் தலைசிறந்த
வெற்றி என்பதாம்.
|