ஐதிரண்டு
கண்டங் குரைப்பவோர்
தண்டூன்றி அறிவிற் றள்ளி
நெய்திரண்டாற் போலுமிழ்ந்து நிற்கு
மிளைமையோ நிலையா தேகாண்!”
எனவரும்
சீவகசிந்தாமணியும் (2626)
“நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
நீரிற் சுருட்டு நெடுத்திரைகள்-நீரில்
எழுத்தாகும் யாக்கை நமரங்கா ளென்ளே
வழுத்தாத தெம்பிரான் மன்று” --நீதிநெறி விளக்கம், 1
எனவரும்
குமரகுருபரவடிகளார் மணிமொழியும் நினைவு கூரற்பாலன.
இது
நெஞ்சிற்குக் கூறும் வாய்பாட்டால், இவ்வாறு அற முதலியவற்றை
அறிதலின்றிப் பயன்படாமல் மூப்பதற்கு முன்பே இளமைப் பருவத்தே தவமும்
தானமும் நிகழ்த்தி உய்வீராக! வென்று செவியறிவுறுத்தபடியாம். (40)
41. |
இதுவுமது
இளமையு நிலையாவா லின்பமு நின்றவல்ல |
|
வளமையு
மஃதேபோல் வைகலுந் துன்பவெள்ள
முளவென நினையாதே செல்கதிக் கென்றுமென்றும்
விளைநில முழுவார்போல் வித்துநீர் செய்துகொண்மின். |
(இ
- ள்.) இளமையும்
நிலையா - இன்ப நுகர்தற்குரிய இளமைப்
பருவமும் நிலைத்திராது; (நீரிற் குமிழிபோல அழிந்துபோம); இன்பமும் நின்ற
அல்ல - நுகரும் இன்பங்கள் தாமும் நிலைத்து நிற்குமியல்புடையனவல்ல;
வளமையும் அஃதேபோல் - அவ்வின்பத்திற்குக் காரணமான செல்வங்களும்
நிற்பனவல்ல; வைகலுந் துன்ப வெள்ளம் - அவ்வின்பம் நிலையாததோடு
வாழ்க்கையின்கண் நாடோறும் துன்பமே மிகுதியாகவும் உள்ளன; உள என
நினையாதே - ஆதலால் இளமையும் இன்பமும் வளமையும் நம்பாலுளவென்று
செம்மாந்திராமல்; விளைநிலம் உழுவார் போல் - விளைகின்ற நன்செயை
உழுகின்ற வேளாண்மாக்கள் எதிரியாண்டிற்கு அவ்விளைவினின்று விதை
கொள்ளுமாறு போலே; நீர்-நீவிரும்; செல்கதிக்கு என்றும் என்றும் -
நாடோறும் இனிச்சென்று பிறக்கின்ற பிறப்பிற்கு ஆக்கமாக; வித்து -
அறமாகிய வித்தினை; வீழ்நாள் படாமல்; செய்து கொண்மின் -
செய்துகொள்ளக் கடவீர்! என்பதாம்.
(வி
- ம்.) நீயிரிளமை முதலியவற்றால் மகிழ்ந்து
வாளா விருந்து
விடாமல் இப்பொழுதே அறமுதலியன செய்து செல்லுந் தேயத்துக்கு ஆக்கஞ்
செய்து கொண்மின். அவ்விளமை முதலியன அழிந்துவிடும் என்றவாறு.
|