கொடாஅ
ரெனினு முடையாரைப் பற்றி
விடாஅ ருலகத் தவர்”
எனவரும் நாலடியானுமுணர்க. (67)
68. |
இதுவுமது
பொருளில் குலனும் பொறைமையில் நோன்பும் |
|
அருளி லறனு மமைச்சி லரசு
மிருளினு ளிட்ட விருண்மையிது வென்றே மருளில் புலவர் மனங்கொண்
டுரைப்ப. |
(இ
- ள்.)
பொருள் இல் குலனும் - செல்வமில்லாதவருடைய குலப்
பெருமையும்; பொறைமை இல் நோன்பும் - பொறுமைப் பண்பில்லாதவன்
மேற்கொண்ட தவமும்; அருள் இல் அறனும் - நெஞ்சத்தின்கண்
அருட்பண்பில்லாதவன் செய்த அறச்செயலும்; அமைச்சு இல் அரசும் -
அமைச்சரில்லாத அரசாட்சியும்; இருளினுள் இட்ட இருள்மையிது என்று -
இருளினூடே கண்ணிலெழுதப்பட்ட கரிய மை போல்வனவாம் என்று; மருள்
இல்புலவர் மனம் கொண்டு உரைப்ப - மயக்கமில்லாத புலவர்கள்
மனத்தினெண்ணிக் கூறாநிற்பர் என்பதாம்.
(வி
- ம்.) குலம் - குடிப்பெருமை, நோன்பு
- தவம்.
அறத்திற்கு அருளுடைமையே காரணமாகலின், அருளாதான் செய்யும்
அறம் அறமாகாதென்பது பற்றி அருளில் அறம் என்றார். இதனை,
“தெருளாதான்
மெய்ப்பொருள் கண்டற்றாற் றேரி
னருளாதான் செய்யு மறம்” --குறள்,
349
எனவருந் திருக்குறளானுமுணர்க.
வறுமை குலப்பெருமையை அழிந்துவிடும் என்பதனை,
“தொல்வரவுந்
தோலுங் கெடுக்குத் தொகையாக
நல்குர வென்னு நசை” --குறள், 1043
எனவும்,
“இற்பிறந்தார் கண்ணேயு மின்மை யிளிவந்த
சொற்பிறக்குஞ் சோர்வு தரும்” --குறள், 1044
எனவும் வருந் திருக்குறள்களானு முணர்க.
இன்னும்,
“குடிப்பிறப் பழிக்கும் விழுப்பங் கொல்லும்
பிடித்த கல்விப் பெரும்புணை விடூஉ
நாணணி களையு மாணெழில் சிதைக்கும்
பூண்முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும்
பகிப்பிணி என்னும் பாவி” --மணிமே, 19:76 - 80
|