பக்கம் எண் :

3

துறந்துபோய் மனமொழி மெய்களால் விளையும் மூவகைக் குற்றங்களையும்
அறுத்தவனாகிய புத்ததேவனுடைய புகழ் கூறுவேற்கு - புகழைப் பாடுகின்ற
என்பால்; வாய்க்கு உற்ற சொல்லின் வழுவும் - அறியாமை காரணமாக
என்று வாய்க்கு, இயல்பாகவமைந்த சொற்களின் குற்றங்களும்; வழுஅல்ல -
அப்புத்தன்பால் அன்புடையாராய் அவனறங் கொண்டுய்ய வெண்ணும்
சான்றோருக்குக் குற்றங்களாகமாட்டா; என்பதாம்.

     (வி - ம்) நோய்க்குற்றமுடைய மாந்தர் எனினுமாம். நோயுடையோர்
தம்நோய்தீரக் கருதுவதல்லது அந்நோயின் தீர்வு கருதித் தாமுண்ணும்
மருந்து இனிதோ? இன்னாதோ? என்று ஆராய்வதிலர். எனவே, பிறவிப்
பிணிக்கு மருந்தாகிய புத்த தேவருடைய அறத்தையே கூறுகின்ற எமது
நூலின்கண் அவ்வறத்தையே நோக்குவதல்லது என் அறியாமை
காரணமாகவுண்டாகிய குற்றங்களை நோக்கி இந்நூலை இகழ்வாரல்லர்.
ஆதலால் யானுமிந்நூலைச் செய்யத் துணிந்தேன் என்பது கருத்து. தீக்குற்ற
காதல்......ஓரார் என்பதற்கும் இங்ஙனம் கூறிக்கொள்க.

     தீக்குற்ற காதலுடையார் என்றது குளிரால் வருந்தித் தீக்காய
அவாவுவோரை. புகைத்தீமை - புகையாலுண்டாகுந் துன்பம். அவை மூச்சு
முட்டுதல்; கண்கரித்தல் முதலியன.

     போய் என்றது அரசவின்பத்தைத் துறந்துபோய் என்றவாறு.

     மூன்று குற்றம் - மெய் மொழி மனம் என்னும் மூன்றிடத்தும்
தோன்றுகின்ற மூவகைக் குற்றங்கள். இவற்றுள் மெய்யிற்றோன்றுங்
குற்றங்கள் கொலை களவு காமம் என்பன மொழியிற்றோன்றுவன பொய்
குறளை கடுஞ்சொல் பயனில்சொல் என்பன. மனத்திற்றோன்றுவன -
வெஃசுல், வெகுளல், பொல்லாக் காட்சி என்பனவாம். என்னை?

            “தீவினை, என்பது யாதென வினவின்
             ஆய்தொடி நல்லாய் ஆங்கது கேளாய்
             கொலையே களவே காமத் தீவிழைவு
             உலையா வுடம்பிற் றோன்றுவ மூன்றும்
             பொய்யே குறளை கடுஞ்சொற் பயனில்
             சொல்லெனச் சொல்லிற் றோன்றுவ நான்கும்
             உள்ளந் தன்னில் உறுப்பன மூன்றும்”

எனவரும் மணிமேகலையானும் உணாக்.

     இனிக் குற்றம் மூன்றும் என்பதற்கு “காமம் வெகுளி மயக்கம்”
என்னும் மூன்று குற்றங்களையும் எனினுமாம். என்னை?

        “யாமே லுரைத்த பொருள்கட் கெல்லாம்
         காமம் வெகுளி மயக்கங் காரணம்” -- மணி, 30 - 5 - 12

எனப் பௌத்தநூல் கூறுதலும் காண்க. இனி, திருவள்ளுவனாரும்,