களையும் புகழ் முதலியவற்றையும்
விரும்புவோர் மனநலம் உடையராகவே
அவை யெல்லாந் தாமே வந்தெய்தும். மனந்தூயரல்லார்க்கும் இவைகள்
எய்தா; ஆதலின் மனந்தூயராய்த் தீவினையை எஞ்ஞான்றும் அஞ்ச
வேண்டும் என்றறிவுறுத்தவாறாயிற்று இதனோடு,
மனத்தூயார்க்கு
கெச்சதன் றாகு மினந்தூயார்க்
கில்லைநன் றாகா வினை --குறள், 456
எனவும்,
மனநலம் மன்னுயிர்க் காக்க மினநல
மெல்லாப் புகழுந் தரும், --குறள், 457
எனவும்,
மனநலத்தின்
ஆகு மறுமைமற் றஃது
மினநலத்தி னேமாப் புடைத்து --குறள், 459
எனவும், வரும் அருமைத் திருக்குறள்களையும்,
பொய்குறளை
வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக்காத்து--மெய்யில்
புலமைந்துங் காத்து மனமா சகற்று
நலமன்றே நல்லா றெனல் --நீதிநெறி விளக்கம்,60
எனவும்,
மனத்த
கறுப்பெனி னல்ல செயினும்
அனைத்தெவையுந் தீயவே யாகும் --எனைத்துணையும்
தீயவே செய்யினு நல்லவாக் காண்பவே
மாசின் மனத்தி னவர் --நீதிநெறிவிளக்கம், 58
எனவும் வரும் குமரகுருபரவடிகளார் பொன்மொழிகளையும் ஒப்பு
நோக்குக. (3)
|
மெய்த்தவம்
|
4.
|
போர்த்தலுடை
நீக்குதல் பொடித்துகண் மெய்பூசல்
கூர்த்தபனி யாற்றுதல் குளித்தழலு ணிற்றல்
சார்த்தரிடு பிச்சையர் சடைத்தலைய ராதல்
வார்த்தையிவை செய்தவ மடிந்தொழுக லென்றான். |
(இ - ள்.) உடை
போர்த்தல் - காவி ஆடை முதலியவற்றால்
உடம்பினைப் போர்த்துக் கோடலும் ; நீக்குதல் - ஆடையுடாது
விட்டுவிடுதலும் ; பொடித் துகள் மெய்பூசல் - சாம்பல் முதலியவற்றை
உடல் நிரம்பப் பூசிக்கோடலும் ; கூர்த்த பனி குளித்து ஆற்றுதல் - மிக்க
பனியினும் (மழையினும்) நீருட்குளித்து நின்று,
|