கல்லுண்டு
கடிய வெம்புங் காணுறை புறவ மெல்லாம்
புல்லிய வினையை வென்று புறக்கொடை காணு மன்றே --சீவக,
1430
எனவும்,
நீட்டிய சடைய
மாகி நீ்ர்மூழ்கி நிலத்திற் சேர்ந்து
வாட்டிய வுடம்பின் யாங்கள் வரகதி விளைத்து மென்னிற்
காட்டிடைக் கரடி போகிக் கயமூழ்கிக் காட்டி னின்று
வீட்டினை விளைக்க வேண்டும் வெளிற்றுரை விடுமி னென்றான்
-- சீவக, 1431
எனவும் வரும் சீவகன் மொழிகளும்,
மழித்தலு
நீட்டலும் வேண்டா வுலகம்
பழித்த தொழித்து விடின் --குறள், 280
எனவும்,
மனத்தது
மாசாக மரண்டார்நீ ராடி
மறைந்தொழுகு மாந்தர் பலர் --குறள், 278
எனவும்
புறங்குன்றி
கண்டனைய ரேனு மகங்குன்றி
மூக்கிற் கரியா ருடைத்து --குறள், 277
எனவும்
வரும் திருவள்ளுவர் பொன்மொழிகளும்,
நெஞ்சு
புறம்பாத் துறந்தார் தவப்போர்வை
கஞ்சுக மன்று பிறிதொன்றே - கஞ்சுகம்
எப்புலமும் காவாமே மெய்ப்புலங் காக்குமற்
றிப்புலமுங் காவா திது --நீதிநெறி விளக்கம், 13
எனவருங் குமரகுருபரவடிகளார் மணிமொழியும் ஒப்புநோக்கற் பாலன.
(4)
|
நுகர்வினால்
அவாவறுத்தல் கூடாதெனல்
|
5.
|
வகையெழிற்
றோள்க ளென்றும்
மணிநிறக் குஞ்சி யென்றும்
புகழெழ விகற்பிக் கின்ற
பொருளில் காமத்தை மற்றோர்
தொகையெழுங் காத றன்னாற்
றுய்த்தியாந் துடைத்து மென்பா
ரகையழ லழுவந் தன்னை
நெய்யினா லவிக்க லாமோ. |
|