பக்கம் எண் :

11

          “குடம்பை தனித்தொழியப் புட்பறந் தற்றே
          யுடம்பொ டுயிரிடை நட்பு”             --குறள், 338

எனவும் வரும் அருமைத் திருக்குறள்களும்,

     “சாதலும் பிறத்த றானுந் தம்வினைப் பயத்தி னாகும்
      ஆதலு மழிவு மெல்லா மவைபொருட் கியல்பு கண்டாய்
      நோதலும் பரிவு மெல்லாம் நுண்ணுணர் வின்மை யன்றே
      பேதைநீ பெரிதும் பொல்லாய் பெய்வளைத் தோளி யென்றான்”

எனவும்,

     “பிரிந்தவர்க் கிரங்கிப் பேதுற் றழுதநங் கண்ணி னீர்கள்
      சொரிந்தவை தொகுத்து நோக்கிற் றொடு்கடல் வெள்ள மாற்றா
      முரிந்தநம் பிறவி மேனாண் முற்றிழை யின்னு நோக்காய்
      பரிந்தழு வதற்குப் பாவா யடியிட்ட வாறு கண்டாய்”

எனவும்,

     “அன்பினி னவலித் தாற்றா தழுவது மெளிது நங்கள்
      என்பினி னாவி நீங்க விறுவது மெளிது சேர்ந்த
      துன்பத்தாற் றுகைக்கப் பட்டார் துகைத்தவத் துன்பந் தாங்கி
      இன்பமென் றிருத்தல் போலு மரியதிவ் வுலகி லென்றாள்”

எனவும்,

     “மயற்கையிம் மக்கள் யோனிப் பிறத்தலும் பிறந்து வந்தீங்
      கியற்கையே பிரிவு சாத லிமைப்பிடைப் படாத தொன்றாற்
      கயற்கணி னளவுங் கொள்ளார் கவற்சியுட் கவற்சி கொண்டார்
      செயற்கையம் பிறவி நச்சுக் கடலகத் தழுந்து கின்றார்”

எனவும்,

     “இளமையின் மூப்புஞ் செல்வத்
          திடும்பையும் புணர்ச்சிப் போதிற்
      கிளைநரிற் பிரிவு நோயில்
          காலத்து நோயு நோக்கி
      விளைமதுக் கமழுங் கோதை
          வேலினும் வெய்ய கண்ணாய்
      களைதுய ரவலம் வேண்டா
          கண்ணிமைப் பளவு மென்றாள்”

எனவும் வரும் சீவக சிந்தாமணிச் செய்யுள்களும் ஒப்பு நோக்கியின்புறுக.

       “நீரிற் குமிழி யிளமை நிறைசெல்வம்
        நீரிற் சுருட்டு நெடுந்திரைகள்--நீரில்