|
கடவுள்
வாழ்த்து
|
|
முன்றான்
பெருமைக்க ணின்றான்முடி
வெய்து காறு
நன்றே நினைந்தான் குணமேமொழித்
தான்ற னக்கென்
றொன்றானு முள்ளான் பிறர்க்கேயுறு
திக்கு ழந்தான்
அன்றே யிறைவ னவன்றாள்சர
ணாங்க ளன்றே. |
(இதன்
பொருள்) முன்
தான் பெருமைக்கண் நின்றான் - லகின்கண்
பிறர் யாரும் மெய்யுணர்ந்து வீடுபெற்று நெறியின் கண் நிற்றற்கு முன்பே
தான் அம்மெய்யுணர்வினை யெய்தித் துறவின்கண் நிலைபெற்று நின்றானாகி ;
முடிவு எய்துகாறும் - தான் பரிநிருவாணம் என்னும் அவ் வீடுபேற்றினை
எய்துமளவும்: நன்றே நினைந்தான் - பிறவுயிர்கட்கெல்லாம் நன்மையுண்டாகும்
நெறியினையே ஆராய்ந்துணாந்தான் ; அன்றே அந்நாளே - குணமே
மொழிந்தான் - அங்ஙனம் தான் ஆராய்ந்துணர்ந்த நல்லறங்களையே
மக்கட்குச் செவியறிவுறுத்தினான் : தனக்கு என்று ஒன்றானும் உள்ளான் -
தான் தனக்கென்று யாதொரு நன்மையையும் வேண்டுகிலனாய் ; பிறர்க்கே
உறுதிக்கு உழந்தான் - பிறருடைய நன்மையின் பொருட்டே முயன்றனன் ;
அவன் இறைவன் - அத்தகைய சான்றோனாகிய புத்த பெருமானே எமக்குக்
கடவுள் ஆவன் : நாங்கள் சரண் - ஆதலால் அவ்விறைவன்
திருவடிகளுக்கே அடியேங்கள் அடைக்கலமாகி வணங்குவேம் என்பதாம்.
(விளக்கம்)
உலகின்கண்
முதன்முதலாக மெய்க்காட்சி பெற்று
அக்காட்சிவழி நின்றொழுகியவன் எங்கள் புத்தபெருமானே ! என்பாள்
முன்றான் பெருமைக்கண் நின்றான் என்றாள். பெருமை, ஈண்டுத்
துறவொழுக்கம். என்னை?
“ஒழுக்கத்து
நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவற் றுணிவு” --குறள், 21
|