பக்கம் எண் :

  பாயிரம்7

தீர்த்துவிட       முடியாது என்பது தெளிவு. ஆயினும். அந்த  முயற்சி
குறித்து  ஒரு   பூனை  பாற்கடலை அடைந்திருக்கிறது;  இம்முயற்சிக்கு
ஆற்றலை விடப்  பேராசையே காரணமாக இருக்கமுடியும்.  அதுபோலத்
தன்  ஒப்பார்   இல்லா  அப்பனாகிய  நடையில் நின்றுயர்  நாயகனின்
புகழ்க்  கடலை   அளந்துரைக்க முடியாது என்பது தெளிவு.  ஆயினும்.
ஆற்றல் கருதாத பேராசை  காரணமாக மட்டுமே இச்செயலில் துணிந்து
இறங்கியிருப்பதாகக்    கவிச்சக்கரவர்த்தி   கூறுகிறார்.    உவமையணி.
(பூனையை   உவமையாகக்    கொள்ளாமல்  ஆசை  பற்றிய   அதன்
முயற்சியையே உவமையாகக் கொள்ளல் வேண்டும்)

நக்குபு:     செய்பு  என்னும் வாய்பாட்டு வினையெச்சத்தைச்  செய
என்னும்  வாய்பாட்டு   வினையெச்சமாகத் திரித்துப் பொருள்  கொள்ள
வேண்டும். (எச்சத் திரிபு)

இராமபிரானது     வெற்றி  குற்றமற்ற வெற்றி என்பார் ‘காசு   இல்
கொற்றம்’  என்றார். பின்னர்  வாலிவதை போன்ற செய்தி  வரும்போது
இத்தொடரை நினைந்து கணிக்க வேண்டும்.                     4
 

5.

நொய்தின் நொய்ய சொல் நூற்கலுற்றேன்--என்னை!-
வைத வைவின் மராமரம் ஏழ் துளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை

செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.
 

வைத  வைவின் - (பெரியோர்கள்)   சாபமிட்டு  வைது  சொல்லும்
வசவுச்  சொல்  உடனே  பலிப்பது  போல; மராமரம்  ஏழ்  தொளை
எய்த
-ஏழு    மாமரங்களும்    எய்தவுடனேயே      தொளைபடும்படி;
எய்வதற்கு எய்திய மாக்கதை-அம்பு எய்தவனுக்கு அமைந்த பெருமை
மிகு  கதையை; செய்த  செய்தவன்-ஆதிகாவியமாக   இயற்றிய   தவ
முனிவனாகிய  வான்மீகியின்; சொல்  நின்ற தேயத்தே-வாக்கு  நிலை
பெற்றிருக்கின்ற     இந்த     நாட்டில்;    நொய்தின்      நொய்ய
சொல்
-எளிமையினும் எளிமையான சொற்களால்; நூற்கலுற்றேன் - இந்
நூலை இயற்றத் தொடங்கினேன்; எனை-என்னே வியப்பு!

நொய்ம்மை:     மென்மை.  எளிமை.  இங்கே  நொய்ய    சொல்.
கருத்தூற்றமற்ற  வெள்ளைச் சொல்லைக் குறித்தது. நிறைமொழி   மாதர்
அருளிக்  கூறினும்  வெகுண்டு  கூறினும்  உடன் பலிக்கும்.   விளைவு
குறித்தது   இவண்   வந்த   உவமை.  இராமபிரானின்    திறம்பற்றிய
நம்பிக்கை  பற்றிச்  சுக்கிரீவன் மனத்தில் ஐயம் தோன்றியபோது   ஏழு
மராமரங்களை  ஒரே  கணை  எய்து.  கணத்தில் துளைத்துக்  காட்டிய
செயல்    இங்கே   நினைவூட்டப்படுகிறது.   இராமபிரானின்    கதை
சொல்லுதற்கு  வான்மீகி முனிவர் பெருந்தவம் செய்திருக்க   வேண்டும்;
இக்   குறிப்பினை  ‘மாக்கதை  செய்த  செய்தவன்’  என்ற    தொடர்
தருகிறது.

ஏழு  என்பதன் இறுதிக் குற்றியலுகரம் தொக்கு. ‘ஏழ்’ என  நின்றது.
நூல்    என்பது  உவமையாகு  பெயராகக்  காப்பியத்தைச்   சுட்டிற்று.
என்னை   என்ற  வியப்புச்  சொல் இடைக் குறைந்து எனை  (என்னை
வியப்பு) என நின்றது.                                     5