பக்கம் எண் :

  நகரப் படலம்95

யாழின்    இசையை   ஒத்திருக்கும்; எழிலிசை  மடந்தையர்- வனப்பு
பொருந்திய  பெண்களது; இன்சொல் இன் இசை- இனிய சொற்களாகிய
இன்னிசை;    பழையர்தம்  சேரியில்-  கள்  விற்கும்  பழையர்களின்
சேரியிலே;   பொருநர்  பாட்டுஇசை-  கூத்தர்கள்  பாடும்  இசையை
ஒத்திருக்கும்.

பருவம்     நிரம்பாதவர்கள்   பருவ  மங்கையர் பருவ முதிர்ந்தவர்
எனப்  பெண்களை  மூவகைப்படுத்தி   அவர்களின் பேச்சுக்கு உவமை
கூறினார்.  குதலை: வடிவச் செம்மை   பெறாத சொல். இது முதல் ஆறு
பாடல்கள்.  ஆடல் பாடல் முதலிய   விளையாடல்களைக் கூறுவனவாம்.
                                                      43
 

136.கண்ணிடைக் கனல் சொரி களிறு. கால் கொடு
மண்ணிடை வெட்டுவ; வேட்கை மைந்தர்தம்
பண்ணைகள் பயில் இடம் குழி படைப்பன;
சுண்ணம்அக் குழிகளைத் தொடர்ந்து தூர்ப்பன.

 

கண்ணிடைக்     கனல் சொரி களிறு- (கோபத்தால்) கண்களிலே
நெருப்பைச்  சொரியும்  ஆண்யானைகள்; கால்  கொடு  மண்ணிடை
வெட்டுவ
-    கால்களால்    நிலத்தை   வெட்டுவனவாம்;  வேட்கை
மைந்தர்தம்
-   பார்ப்பவர்   விரும்பும்    அழகிய   இளைஞர்களின்;
பண்ணைகள்  பயில்  இடம்
- விளையாட்டுகள் நடைபெறும் இடங்கள்;
குழி படைப்பன
- குழிகளை உடையனவாம்; அக்குழிகளைச் சுண்ணம்
தொடர்ந்து  தூர்பன
-  அந்தக்  குழிகளை  அவ்விளைஞர்  அணிந்த
வாசனைப் பொடிகள் தூர்ப்பனவாகும்.

இளங்     குமரர்கள்   யானைகளை    உடன்  கொண்டு  சென்று
விளையாடுவர்.  அந்த  யானைகள்  நிலத்தைக்   காலால் வெட்டி குழி
செய்கின்றன.     அக்     குழிகள்     வாசனைப்      பொடிகளால்
தூர்க்கப்படுகின்றனவாம்.
 
   பண்ணை - விளையாட்டு.                              44
 

137.பந்துகள் மடந்தையர் பயிற்றுவாரிடைச்
சிந்துவ முத்தினம்; அவை திரட்டுவார்
அந்தம் இல் சிலதியர்; ஆற்ற குப்பைகள்.
சந்திரன் ஒளி கெட. தழைப்ப தண் நிலா.
 

பந்துகள் பயிற்றுவார் மடந்தையர் இடை- பந்தாடுபவராகிய இளம்
பெண்களிடமிருந்து;      முத்தினம்         சிந்துவ-     (அவரது
அணிகலங்களிலிருந்து)     முத்துக்கள்      சிந்துகின்றன;     அவை
திரட்டுவோர்
- அம்முத்துக்களைச் சேகரித்துச் சேர்க்கும்;  அந்தம் இல்
சிலதியர்
-   அளவில்லாத  பணிப்  பெண்கள்;  ஆற்று  குப்பைகள்-
குவித்த அந்த முத்துக்  குவியல்கள்;  சந்திரன் ஒளிகெட  தண் நிலா
தழைப்ப
-  சந்திரனது   ஒளியும்  குறையுமாறு  குளிர்ந்த  நிலா  ஒளி
தழைப்பனவாம்.