பக்கம் எண் :

96பால காண்டம்  

பெண்கள்     பந்து விளையாடும் இடங்களில் அணிகலன் முத்துகள்
சிதறி     விழ.   பணிப்பெண்கள்   அவைகளை  எல்லாம்  சேகரித்து
ஆங்காங்கு    குவித்து வைக்கின்றனர். அந்தக் குவியல்கள் சந்திர ஒளி
கெடுமாறு- வெண்மைநிற ஒளியை உடையனவாய் விளங்குகின்றன.

பயிற்றுவார்: ஆடுகின்ற  மகளிர் தன் வினைப் பொருளில் வந்த பிற
வினையாலணையும் பெயர். சிலதியர்: குற்றேவல் மகளிர்.

‘ஆற்றின்’   என்ற  பெயரெச்சத்தின்   இன்  என்னும்  இடைநிலை
தொக்கு. ‘ஆற்ற’ என நின்றது.                              45
 

138.அரங்கிடை மடந்தையர் ஆடுவார்; அவர்
கருங் கடைக் கண் அயில் காமர் நெஞ்சினை
உருங்குவ; மற்று. அவர் உயிர்கள் அன்னவர்
மருங்குல்போல் தேய்வன; வளர்வது. ஆசையே.
 

அரங்கிடை மடந்தையர் ஆடுவார்-நடன அரங்குகளிலே பெண்கள்
நடனம்  ஆடுவார்கள்; அவர கருங் கடைக்கண் அயில்- அவர்களின்
கருமையான   கடைக்கண்களாகிய   வேல்கள்;   காமர்  நெஞ்சினை
உருங்குவ
-  காதல்   மிக்க  ஆடவர்களின் மனத்தை உருக்குவனவாம்;
மற்று   அவர் உயிர்   அன்னவர்   மருங்குல்  போல்
-  பின்னும்
அவ்வாடவரின்     உயிர்கள்  அப்பெண்களின்  இடைகளைப்  போல;
தேய்வன
- மெலிவனவாகும்;  வளர்வது ஆசை- அந்த மைந்தர்களுக்கு
அம்மகளிரின் மீது ஆசை பெருகுவதாகும்.

நடன       அரங்கில்  நடனமாடும் மகளிரின் பார்வை அவர்களது
காதலர்களான ஆண்களின்    உயிரை உண்ணும். அம்மைந்தர்தம் உயிர்
அம்மகளிரது  இடையென    மெலியும்.  ‘உறங்குவ’ என்பது ‘உருக்குவ’
என்பதன்  மெலித்தல்  விகாரம்.    உருங்குதல்:  உண்ணுதல்  என்றும்
பொருள்  கொள்ளலாம். இதனை “அரவின்   உடலுயிர் உருங்குவணம்”
என்று பரிபாடலாலும் (பரி. 4: 42) அறியலாம்.                   46
 

139.பொழிவன சோலைகள் புதிய தேன் சில;
விழைவன தென்றலும் மிஞிறும் மெல்லென
நுழைவன; அன்னவை நுழைய. நோவொடு
குழைவன. பிரிந்தவர் கொதிக்கும் கொங்கையோ.

 

பொழிவன சோலைகள் புதிய தேன் சில- சில சோலைகள் புத்தம்
புதிய   தேனைச்   சொரிவன;   விழைவன   தென்றலும்  மிஞிறும்
மெல்லென நுழைவன
-   அத்தேனை   விரும்பி  தென்றலும் வண்டும்
மெல்ல   அச்   சோலைகளில்   நுழைவனவாம்; அன்னவை நுழைய
அவை   அவ்வாறு   நுழைய;  பிரிந்தவர்  கொதிக்குக்  கொங்கை-
தலைவனைப்  பிரிந்த   மகளிரின்  (காமத்தால்)  கொதிக்கும் தனங்கள்;
நோவொடு குழைவன
- வருத்தத்துடன் மெலிவனவாயின.