பக்கம் எண் :

  நகரப் படலம்97

சோலைகள்   அன்றலர்ந்த மலரின் மதுவைப் பொழிகின்றன. அந்தத்
தேனை  விரும்பித்   தென்றலும்   வண்டும் மெல்ல அச்சோலையினுள்
நுழைகின்றன.   தென்றலும்     வண்டும்    பிரிந்தவருக்குத்   துன்பம்
விளைவிப்பன   என்பதால்    தலைவனைப்   பிரிந்த  தலைவி.  காம
நோயால் வருந்த. தனங்கள் வருந்தி மெலிந்தனவாம்.            47
 

140. இறங்குவ மகர யாழ் எடுத்து இன் இசை
நிறங் கிளர் பாடலான் நிமிர்வ; அவ் வழி
கறங்குவ வள் விசி கருவி; கண் முகிழ்த்து
உறங்குவ. மகளிரோடு ஓதும் கிள்ளையே.

 

மகர     யாழ்   -  மகர  யாழிலே  எடுத்த  (விரலாலே  நெருடி
கவர்ந்தெடுக்கப்பட்ட);  இன்  இசை-  இனிய  இசையொலிகள்;  நிறங்
கிளர்
-     உள்ளக்    கிளர்ச்சி    தரும்    பாடல்கள்   காரணமாக
வாய்ப்பாட்டோடு;  இறங்கவே- யாழ் இசை நலிந்தொலிப்பன; நிமிர்வ-
எடுத்தொலிப்பன;  அவ்வழி- அந்த முறையில்; வள் விசி கருவி- வார்
கட்டிய   கருவியாகிய முழவுகள்; கறங்குவ- ஒலிப்பன (அந்த இசையைக்
கேட்டு); மகளிரோடு-  பெண்களோடு;  ஓதும்  கிள்ளைகள்-  பேசும்
கிளிகள்;   கண்முகிழ்த்து   உறங்குவ-   கண்ணை  மூடிக்  கொண்டு
உறங்குவனவாம்.

மகரயாழ்     பத்தொன்பது   நரம்புகள் கொண்டது. இறங்குவனவும்
நிமிர்வனவுமாகிய   இசையோட்டங்களை     முறையே  அவரோகணம்.
ஆரோகணம்     என்பர்.     யாழிசைக்கு      ஏற்ப    முடிவுகளும்
முழங்குவனவாம்.  இசை நயத்தில் ஈடுபட்டுக்   கிளிகள் உறங்குகின்றன.
வள்: தோல். விசி கருவி: வினைத்தொகை.                     48
 
                                             மகளிர் மேனி
 

141.குதை வரிச் சிலைநுதல் கொவ்வை வாய்ச்சியர்
பதயுகத் தொழில்கொடு. பழிப்பு இலாதன
ததை மலர்த் தாமரை அன்ன தாளினால்.
உதைபடச் சிவப்பன. உரவுத் தோள்களே.

 

குதை  வரிச்சிலை நுதல்- நாண் பூட்டிய வரியமைந்த வில் போன்ற
நெற்றியையும்;  கொவ்வை  வாய்ச்சியர்-  கோவைப்  பழம்  போன்ற
வாயையும் உடைய  பெண்களின்;  பதயுகத்  தொழில்கொடு- இரண்டு
பாதங்களுக்கும்    (செம்பஞ்சு  ஊட்டுதலாகிய)  தொழிலைக்  கொண்டு;
பழிப்புஇலாதன
-   பிறரால்  பழித்துக்  கூற  இயலாதனவாகிய;  ததை
மலர்த்தாமரை  அன்னதாளினால்
-  நெருங்கிய  இதழ்களை  உடைய
தாமரை  போன்ற   பாதங்களால்;  உதைபட-  (ஊடல்கொண்டு) உதை
பட்டதனாலே; உறவுத் தோள்கள் சிவப்பன- ஆண்களின் வலிமைமிக்க
தோள்கள் சிவந்து காணப்படும்.