பக்கம் எண் :

98பால காண்டம்  

ஊடலால் தலைவி.  தலைவனைக் காலால் உதைப்பதுண்டு. அதனால்
அத்தலைவனது வலிய தோள்கள் சிவந்தன என்கிறார்.

குதை:     வில்நாண். வரி: கட்டு. குதை. வரி சிலை என்று வில்லைச்
சிறப்பிக்கிறார்.    சிலை  நுதல்: சிலை போன்ற நுதல் உவமைத்தொகை.
பத   யுகம்:     இரண்டு  பாதங்கள்  இது  முதல்  மூன்று  பாடல்கள்
அந்நகரத்தில் வாழும் மகளிரின் மேனி அழகைக் கூறுவனவாம்.    49
 

142.பொழுது உணர்வு அரிய அப் பொரு இல் மா நகர்த்
தொழு தகை மடந்தையர் சுடர் விளக்கு எனப்
பழுது அறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்.
எழுது சித்திரங்களும் இமைப்பு இலாதவே?

 

பொழுது     உணர்வு அறிய- பொழுதை அறிவதற்கு அரிய; அப்
பொழுவுஇல் மாநகர்
-அந்த ஒப்பற்ற பெருநகரில் உள்ள; தொழு தகை
மடந்தையர்
-   (கற்பின்    சிறப்பால்)   எல்லோரும்   வணங்கத்தக்க
பெருமையுள்ள  பெண்களது; சுடர்விளக்கு என பழுதுஅறு மேனியை-
ஒளி  விளக்கு  போன்ற.   குற்றம்   எதுவுமின்றித் திகழும் உடம்புனை;
பார்க்கும்  ஆசை கொல்
-பார்க்க விரும்பும் ஆசையால்தானே; எழுது
சித்திரங்களும்  இமைப்பு  இலாத
-  எழுதிய ஓவியங்களும் கண்களை
இமைக்காதனவாய் உள்ளன.

பொழுது   உணர்வரிய: அந்நகரத்துப் பெண்களின் அணிகலன்களின்
ஒளியால்  இரவா?  பகலா?    என்று உணர இயலாத மிக்க ஒளியுடைய
நகராதலால் இவ்வாறு கூறினார்.   “நல்லார் அணிகலம் பகலைச் செய்ய”
சிந்தாமணி  (2500)  ஒப்பு    நோக்கத்தக்கது.  அடுத்த  பாடலில் (143)
மகளிர்   மேனிக்கு   விளக்கை    உவமையாக்குதல்  காண்க.  ஓவிய
உருவங்கள்   கண்களை     இமைக்காமல்   இருப்பதற்கு.  அயோத்தி
மகளிரின்   பழுதறு    மேனியைப்  பார்க்கும்  ஆசைபோலும்  எனக்
காரணம் கூறியதால் இது ஏதுத் தற்குறிப்பேற்ற அணி.           50
 

143.தணி மலர்த் திருமகள் தங்கு மாளிகை
இணர் ஒளி பரப்பில் நின்று இருள் துரப்பன.
திணி சுடர் நெய்யுடைத் தீ விளக்கமோ?
மணி விளக்கு: அல்லன் மகளிர் மேனியே.

 

தணிமலர்த்     திருமகள்   - குளிர்ந்த தாமரைப் பூவில் வாழும்
இலக்குமி  தேவி;  தங்கும்  மாளிகை- தங்கியிருக்கும் அயோத்தி நகர
மாளிகைகள்; இணர் ஒளிபரப்பி நின்று- மிக்க ஒளி வீசி நின்று; இருள்
துரப்பன
-இருளை ஓட்டுபவை; திணிசுடர் நெய்யுடைத் தீவிளக்கமோ-
செறிந்த ஒளியுடைய நெய்விளக்குகளின் விளக்கமோ; மணிவிளக்கல்ல-
மணிகளின் ஒளியோ அல்ல; மகளிர் மேனியே- அந்நகரத்து மகளிரின்
மேனி ஒளியே.