பக்கம் எண் :

  நகரப் படலம்99

நெய்    விளக்கின் ஒளியும். மணிகளின் ஒளியும் ஆகிய இரண்டிலும்
மேலோங்கி      இருப்பது   மகளிரின்   மேனி   ஒளியே.   அதுவே
அந்நகரத்தின்     இருளை  நீக்குவது  எனக் கூறுகிறார். இருள் ஓட்டும்
இயல்பு   கொண்ட   விளக்கொளி.  மணியொளி  இரண்டையும்  நீக்கி
அவ்வியல்பை     மகளிர்    மேனிக்கு   ஏற்றிக்   கூறியதால்   இது
அவநுதியணியாம்.                                        51
 
                                   பாடினி பாட. விறலின் ஆட
 

144.பதங்களில் தண்ணுமை. பாணி. பண் உற
விதங்களின். விதி முறை சதி மிதிப்பவர்
மதங்கியர்; அச் சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள்; அல்லன புரவித் தார்களே.
 
  

தண்ணுமை.   பாணி. பண். உற- மத்தள ஒலி. தாள ஓசை. பாட்டு
ஒலி  இவைகளுக்குப்  பொருந்த;  விதிமுறை  விதங்களின்-  நாட்டிய
நூல்முறைப்படி   பல   விதங்களாக;   பதங்களில்   சதிமிதிப்பவர்-
பாதங்களால்   சதிபெற  வைத்து  நடனம்  ஆடுபவர்கள்;  மதங்கியர்-
ஆடல்  பாடல்வல்ல  பெண்கள்  ஆவர்; அச் சதி வகுத்துக்காட்டுவ-
அந்தத்   தாளச்    சதியை  விவரித்துக்  காட்டுபவை;  சதங்கைகள்-
அப்பெண்கள்    கால்களில்  அணிந்துள்ள  சதங்கைகளும்;  அல்லன
புரவித்தாள்களே
- அவ்வாறு ஆடுகின்ற குதிரைகளின் கால்களுமே.

அந்த     நகரத்துப்  பெண்களின் நாட்டியச் சிறப்பும். குதிரைகளின்
ஆட்டச்  சிறப்பும்    கூறப்பட்டன.  குதிரை  தாளத்துக்கேற்ப  ஆடும்
என்பதை  மேலே     (751)  எழுச்சிப் படலத்திலும் கூறுவார். பதங்கள்:
பாதங்கள்.  தண்ணுமை:    மத்தளம். பாணி: கைத்தலம். சதி: தாளஒத்து.
மதங்கியர்: ஆடு மகளிர்.                                  52
 
                                        மகிழ்ச்சிப் புலப்பாடு
 

145.முளைப்பன முறுவல்; அம் முறுவல் வெந் துயர்
விளைப்பன; அன்றியும். மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண் இடை; இளைப்ப. மென் முலை
திளைப்பன. முத்தொடு செம் பொன் ஆரமே.

 

முளைப்பன     முறுவல் - அந்நகரத்துப் பெண்களின் முகத்திலே
எப்போதும்   புன்சிரிப்பு   தொன்றுவன;   அம்முறுவல்   வெந்துயர்
விளைப்பன
-  அந்த  புன்சிரிப்பு.   அப்பெண்கள்பால் காதல் கொண்ட
ஆடவர்க்குக்  கொடிய  துன்பத்தை   உண்டாக்கும்;  அன்றியும் நுண்
இடை
-   அல்லாது.   அம்மகளிரின்    சிறிய   இடைகள்;  மெலிந்து
நாள்தோறும்  இளைப்பன
-  நாள்தோறும்  மெலிந்து இளைப்பனவாம்;
நுண்  இடை  இளைப்ப
- அவர்களது  மெல்லிடை இவ்வாறு இளைக்க;
மென்முலை    முத்தொடு செம்பொன்    ஆரமே   திளைப்பன
-
அம்மகளிரது  மென்மையான  தனங்கள்  முத்து வடங்களும் பொன்னரி
மாலைகளும் பூண்டு திளைப்பனவாகும்.