தழல்விழி ஆளியும் துணையும்- நெருப்பென விழிக்கும் கண்களை உடைய ஆண் சிங்கங்களும் துணையான பெண்சிங்கங்களும்; தாழ்வரை முழை விழை- தங்குவதற்கு ஏற்றனவாகிய மலைக் குகைகளை விரும்பும்; கிரி நிகர் களிற்றின் மும்மத மழைவிழும்- மலை போன்ற யானைகளின் மதநீர் மழை பொழியும்; விழும் தொறும் மண்ணும் கீழ்உற குழை விழும்- அவ்வாறு மழை சொரியும் தோறும் நிலமும் ஆழமாகுமாறு சேறாகும்; அதில் கொடித்திண் தேர்கள் விழும்- அந்தச் சேற்றில் கொடிகளை உடைய வலிய தேர்கள் புதை யுண்ணும் நெருப்பெழும் விழிகொண்ட ஆண் சிங்கமும் அதன் பெண்சிங்கமும் தங்குவதற்கு ஏற்ற குகைகள் கொண்டது அம் மலை; அந்த மலைபோன்ற யானைகளின் மும்மதமும் மழை போலப் பொழிவதால் மண்ணொடு கலங்கித் தரை சேறாகும்; அந்தச் சேற்றிலே தேர்கள் புதையுண்ணும். இப்பாடலின் செய்தி இது. ‘தழல் விழி ஆளியும் துணையும் தாழ்வரை மழை விழை’ என்ற |