தோரணம் இரவியின் சுடர்மணி இமைக்கும் - அந்த நகரத்துத் தோரணங்கள் சூரியன் போன்ற சுடர்மிகு மணிகளால் ஒளிரும்; திசைகள் தெருவினின் சிறியன - நெடிய வீதிகளைவிடத் திசைகள் சிறியனவாம்; சேண்விளக்கு அருவியின் பெரியன ஆனைத் தானங்கள்- மலையின் மிக உயர்ந்தே இருக்கும் அருவியை விட யானையின் மதநீர் பெரியதாகும்; பரவையின் பெரியன புரவிப் பந்தி -கடல்களை விடவும் பெரியது. அந்நகரத்தில் குதிரைகள் கட்டும் இடம். திசைகள் தெருவினில் சிறியன என்றது உயர்வு நவிற்சியின் எல்லை. தானம்: மதநீர்; பந்தி: குதிரை கட்டும் லாயம்; சேண்: உயரம்; சுடர்மணி வினைத்தொகை. 63 |