பக்கம் எண் :

  நகரப் படலம்105

156.சூளிகை மழை முகில் தொடக்கும் தோரண
மாளிகை மலர்வன. மகளிர் வாள் முகம்;
வாளிகள் அன்னவை மலர்வ; மற்று அவை.
ஆளிகள் அன்னவர் நிறத்தின் ஆழ்பவே.

 

சூளிகை மழை முகில் தொடக்கும்- அந் நகரத்து  மாளிகைகளின்
உச்சி   (மிக  உயர்ந்திருப்பதால்)  மேகத்தைப்  பிணிக்கும்;  தோரன
மாளிகை    மகளிர்   வாண்முகம்  மலர்வன
-  தோரணங்களால்
அலங்கரிக்கப்பட்டு   விளங்கும்   மாளிகைகளிலெல்லாம்    மகளிரின்
ஒளிமிகு  முகங்கள் மலர்ந்து பொலிவனவாகும்; அன்னவை  வாளிகள்
மலர்வ
- அம்முகங்களில் அம்புகள் விளங்குகின்றன (கண்கள்);   மற்று
அவை ஆளிகள் அன்னவர் நிறத்தில் ஆழ்ப
- மற்று. அவ்வம்புகள்
சிங்கத்தை ஒத்த ஆடவர்களின் மார்பில் ஆழ்வனவாம்.

தொடக்கும்: பிணிக்கும்;  வாள்முகம்:  ஒளி  பொருந்திய    முகம்;
வாளிகள்:  அம்புகள்;  கண்களை  அம்பு  என்றது  உருவகம்;  நிறம்:
மார்பு; அன்னவை: அம்முகங்கள்; ஆளி: சிங்கம்.               64
 

157.மன்னவர் கழலொடு மாறு கொள்வன.
பொன் அணித் தேர் ஒலி. புரவித் தார் ஒலி;
இன் நகையவர் சிலம்பு ஏங்க. ஏங்குவ.
கன்னியர் குடை துறைக் கமல அன்னமே

 

மன்னவர் கழலொடு- அரசர்களின் வீரக் கழல்களின்  ஒலியுடன்;
மாறு கொள்வன - மாறு  கொண்டு ஒலிப்பவை; பொன்னணி   தேர்
ஒலி 
-  பொன்னால்   அலங்கரிக்கப்பட்ட   தேர்களின்     ஒலியும்;
புரவித் தார் ஒலி - குதிரைப் படைகளின் ஒலியுமே  ஆகும் ;  இன்
நகையவர்  சிலம்பு  ஏங்க
  -  இனிய  சிரிப்பு  உடைய  மகளிரின்
சிலம்புகள் ஒலிக்கும்படியாக; கன்னியர்   குடைதுறை -     நீராடும்
நீர்த்துறையில்  வாழும்;  கமல அன்னமே   ஏங்குவ -  தாமரையில்
உள்ள  அன்னங்களே  ஏங்கு வனவாம்.

பொன்     அணி தேரொலியும். புரவித் தாரொலியும்.   மன்னவர்
கழலொடு    மாறுகொண்டு    ஒலிப்பன.   கன்னியர்    சிலம்பேங்க.
அன்னங்கள்    ஏங்குகின்றன.   அம்மகளிரைப்   போன்று    நடை
அமைந்திருக்கும்     அம்மாதர்கள்     அணிந்துள்ள     சிலம்புகள்
நமக்கில்லையே  என  அன்னங்கள்  ஏங்கின  என்கிறார்.   மன்னவர்
கழலொலி.  தேரொலி.  புரவித் தாரொலி. சிலம்பொலி ஆகிய  ஒலிகள்
மிக்கது   அந்நகரம்.   தார்:   படை.  படை:  குதிரை.   குடைதுறை:
வினைத்தொகை.   ஓரிடத்து   எழும்  ஒலிகளைக்  கொண்டு   அந்த
இடத்தின் தன்மை அறியலாம்.                             65

                                   நகரத்தார் பொழுதுபோக்கு
 

158.ஊடவும். கூடவும். உயிரின் இன் இசை
பாடவும். விறலியர் பாடல் கேட்கவும்.