பக்கம் எண் :

108பால காண்டம்  

இளமகளிர்  என  அறிகிறோம்.  சூது:  தாயமாடுதல். உந்தல்: ஆடுதல்.
செந்துவர்:   பவளச்  செம்மை.  66ஆம்  பாடல்  தொடங்கி  நான்கு
பாடல்களில்    நகர    மாந்தரின்    பலவகைப்   பொழுதுபோக்குக்
கூறப்பட்டது.                                             69

                                 கொடிகளும் தோரண வாயிலும்
 

கலித்துறை
 

162.நானா விதமா நளி மாதிர வீதி ஓடி.
மீன் நாறு வேலைப் புனல் வெண் முகில் உண்ணுமாபோல்.
ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள் மீப் போய்.
வான் ஆறு நண்ணி. புனல் வற்றிட நக்கும் மன்னோ.

 

ஆனாத மாடத்திடை ஆடு கொடிகள்-அந்நகரின் குறைவில்லாத
மாடங்களின்  மீது ஆடுகின்ற கொடிகள்; நானாவிதமா   நளி  மாதிர
வீதி ஓடி
- நாலாவிதமாகவும் பறந்து பெரிய  வான  வீதியிலே    ஓடி;
மீன் நாறு வேலைப்புனல்- மீன் நாறும் கடல் நீரினை; வெண் முகில்
உண்ணுமா போல
-  வெண்மை  நிறமுடைய   மேகங்கள்    பருகுவது
போல;  மீப்  போய் -  மேலே  சென்று;  வான் ஆறு   நண்ணி -
வானாறாகிய ஆகாய கங்கையை   அடைந்து; புனல்வற்றிட  நக்கும்-
அதன்  தண்ணீர் வற்றும்படி நக்கும்.

அந்த நகரத்து மாடங்களின் மீது ஆடும் கொடிகள் வானவிதியிலே
மேலே  சென்று  மேகங்கள்  கடல்  நீரைப் பருகுவது போல ஆகாய
கங்கையின்  நீர்  வற்றும்படி  நக்கும்  என்றார். நானா விதமா: நாலா
விதங்களிலும்.  ஆனாத:  குறையாத.  மீப்  போய்:  மேலே  சென்று.
வானாறு:  ஆகாய  கங்கை.  மன்னோ:  அசை. கொடிகளின் சிறப்பை
உயர்த்திக் கூறியதால் உயர்வு நவிற்சி அணி.                   70
 

163.வன் தோரணங்கள் புணர் வாயிலும். வானின் உம்பர்
சென்றுஓங்கி. ‘மேல்ஓர் இடம் இல்’ எனச் செம்
                               பொன் இஞ்சி
குன்று ஓங்கு தோளோர் குணம் கூட்டு இசைக் குப்பை
                                      என்ன-
ஒன்றோடு இரண்டும். உயர்ந்து ஓங்கின. ஓங்கல் நாண.

 

வன் தோரணங்கள் புணர் வாயிலும்-வன்மையான தோரணங்கள்
பொருந்திய வாயில்களும்; செம்பொன்  இஞ்சி  ஒன்றோடிரண்டும்-
செம்பொன்னால்  அமைந்த  மதில்கள்  ஒன்றோடிரண்டாகிய மூன்றும்;
வானின் உம்பர் சென்று ஓங்கி-வானத்தின் மேலே சென்று உயர்ந்து;
மேல் ஓர் இடம் இல் என - அதற்கு மேலே செல்ல ஒரு