பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்123

முரசு:   கொடை. போர். மணம் என்று மூன்று வகையினது. இங்குச்
செழுங்கடை   என்றதால்   கொடை  முரசே  முழங்கியது   எனலாம்.
முத்தமாமுடி;  என்று  கூறினும்  ‘ஒரு  ழொழி  தன்   இனம் சுட்டும்’
என்றபடி    ஏனைய    மணிகைளையும்     கொள்ளலாம்.   “அரசர்
நம்கோமகன்”   சக்கரவர்த்தி   என்ற    பொருளில்   வந்தது.  வாம்:
மேன்மை.   சரொருகம்:  தாமரை.  நீரில்   முளைப்பது   (சரம்-  நீர்;
ருகம்-முளைப்பது)    அதிலமர்ந்துள்ள    பிரமனுக்குப்    பெயராகும்.
‘மனத்தில்  எண்ணினான்’  என்றது.  தான்  முன்பே அறிந்த தாயினும்
அதனை     வெளிப்படுத்தலாகாமையால்     “மனத்திலெண்ணினான்”
என்றார்.

மகப்பேறின்மை     குறித்து.  மன்னன் வசிட்டனிடம் கூறி. வருந்த.
அதைக்  கேட்ட  அம்மாமுனிவன்.   தேவர்களுக்கு  முன்பு  திருமால்
அருளியதைச் சிந்தித்தான் என்பது கருத்து.                      5
   

185.அலை கடல் நடுவண். ஓர் அனந்தன் மீமிசை.
மலை என விழி துயில்வளரும் மா முகில்.
‘கொலைதொழில் அரக்கர்தம் கொடுமை தீர்ப்பென்’ என்று.
உலைவுறும் அமரருக்கு உரைத்த வாய்மையை.

 

அலைகடல் நடுவண்-அலைகள் மிகுந்துள்ள பாற்கடல் நடுவே; ஓர்
அனந்தன்  மீமிசை
-  ஒப்பற்ற ‘அனந்தன்’ எனும் பாம்பணை மேலே;
மலை  என  விழிதுயில் வளரும்
- கரியமலை போல. கண்வளர்கின்ற;
மாமுகில்
-  பெரிய மேகம் போன்ற (நிறமும். செயலுமுடைய) திருமால்;
‘கொலை தொழில் அரக்கர் தம்  கொடுமை  திர்ப்பென்’. என்று
-
உயிர்களைக்    கொல்லுதலே    தொழிலாக    உடைய   அரக்கரின்
கொடுமையைத்   தீர்ப்பேன்   என்று;  உலைவு  உறும் அமரருக்கு-
அவ்வரக்கர்களால்  வருந்தும்  தேவர்களுக்கு; உரைத்த வாய்மையை-
சொன்ன வாக்குறுதியை

முந்திய     பாடலில்  ‘எண்ணினான்’ என்பதனுடன் “வாய்மையை”
என்பது   முடிகிறது.  அலைகடல்  என்று   பொதுவாகக்  கூறினாலும்.
திருமாலின்     உறைவிடமான     ‘பாற்கடல்’    என்று    பொருள்
உரைக்கப்பட்டது.  மீமிசை:  உருபின் மேல் உருபு  வந்து ‘மிக மேலே’
என்ற  பொருள்  தந்து  நின்றது.  ‘மலை’  என்ற   பொதுச்சொல்லும்
திருமாலைக்    குறிப்பதாதலின்    ‘கரியமலை’    என்ற   பொருளை
உடையதாயிற்று.  தேவர்களுக்கு  அரக்கரால்  மரணமில்லை என்பதை
உணர்த்த   ‘அமரர்’   என்றார்.   அமரர்:   மரணமற்றவர்.  வல்மை:
வாக்குறுதி.  அடுத்து  வரும்  23 பாடல்கள்  தேவர்களுக்குத் திருமால்
வாக்குறுதி அளித்த செயலை விரித்துரைப்பனவாகும்.              6
   

186.சுடு தொழில் அரக்கரால் தொலைந்து. வான் உளோர்.
கடு அமர் களன் அடி கலந்து கூறலும்.
படு பொருள் உணர்ந்த அப் பரமன். ‘யான் இனி
அடுகிலேன்’ என மறுத்து. அவரொடு ஏகினான்