பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்125

188.பாகசாதனன்தனைப் பாசத்து ஆர்த்து. அடல்
மேகநாதன். புகுந்து இலங்கை மேய நாள்-
போக மா மலர் உறை புனிதன்- மீட்டமை
தோகைபாகற்கு உறச் சொல்லினான்அரோ.

 

அடல்   மேக நாதன்- (இராவணனது மகனாகிய) வலிமை மிகுந்த
மேக  நாதன்  (இந்திரசித்து)  எனுமரக்கன்;  புகுந்து  பாக  சாதனன்
தனை
-   (அமராவதி   நகரக்குள்)  புகுந்து  தேவர்கள்  தலைவனான
இந்திரனை; பாசத்து  ஆர்த்து  - கயிற்றால் கட்டி;  இலங்கை மேய
நாள்
- இலங்கைக்குக்  கொண்டு  போன  போது;  போக  மா மலை
உறை புனிதன் 
-  இன்பம்.   தரும்  அழகிய  தாமரையில்  வாழும்
புனிதனாகிய பிரமன்.  தான்;   மீட்டமை   தோகை பாகற்கு உற -
அந்த     இந்திரனை    மீட்டுவந்ததை       உமையொருபாகனாகிய
சிவபெருமானுக்குப் பொருந்த; சொல்லினான்- எடுத்தியம்பினான்.

பாக     சாதனன்: இந்திரன் (புண்ணிய பலன்களை உயிர்கள் பெற
உதவுபவன்) மேகநாதன்: பிறந்ததும் மேகத்தைப் போல  முழங்கியதால்
இப்பெயர் பெற்றான் என்பர். இந்திரனைப் போரில் வென்றபின் பெற்ற
சிறப்புப்   பெயரே   “இந்திரசித்து”   என்பது.   மேகநாதனிடமிருந்து
இந்திரனைத்     தான்     மீட்டுவந்ததை.     நான்முகன்.    சிவன்
முதலானவர்களுக்குச் சொன்னான் என்பது கருத்து.                9
 

189.‘இருபது கரம். தலை ஈர்-ஐந்து என்னும் அத்
திருஇலி வலிக்கு. ஒரு செயல் இன்று. எங்களால்.
கரு முகில் என வளர் கருணைஅம் கடல்
பொருது. இடர் தணிக்கின் உண்டு. எனும் புணர்ப்பினால்.
 

கரம் இருபது தலை ஈரைந்து என்னும்- இருபது கைகளும். பத்துத்
தலைகளும் உடையவன் என்று சொல்லப்படும்; அத்திருவிலி வலிக்கு-
அந்த  அருட்  செல்வமில்லாத இராவணனது  உரவலிமை.  வரவலிமை
ஆகிய  வல்லமைக்கு;  எங்களால்  ஒரு செயலின்றி- எங்களால் ஒரு
எதிர்ச்  செயலும்  செய்ய  இயலாதவர்களாக  இருக்கிறோம்; கருமுகில்
என  வளர்கருணையங்  கடல்
-  கரிய  மேகம்  போல (பாற்கடலில்)
கண்வளர்கின்ற    கருணைக்    கடலாகிய     திருமால்    பொருது;
இடர்தணிக்கின்
-  அவ்வரக்கருடன்  போரிட்டு.  எங்கள் துன்பத்தைத்
தணித்தால்தான்; உண்டு எனும் புணர்ப்பினார்-எங்களுக்கு உய்வுண்டு
என்னும் கருத்தினால்.

தருவிலி:     செல்வமில்லாதவன். ‘அ’ என்னும் சுட்டால் உய்தற்குக்
காரணமாகிய  அருட்செல்வத்தை  உணர்த்திநின்றது. ஒரு  செயல்: சிறு
செயலுமாம்.   ‘ஒரு’   சிறுமையை   உணர்த்தும்    அருட்செல்வத்தை
மிகுதியும் உடைய திருமாலைக்