பக்கம் எண் :

126பால காண்டம்  

“கருணையங்கடல்”      என்றார்.    கைம்மாறு   கருதாது   உதவும்
தன்மையால்  “கருமுகில்”  என்று திருமால்  போற்றப்படுகிறார் அவர்.
பொருது- அரக்கரை அழித்தால் நமது துன்பம்தீரும்  என்ற கருத்தைத்
தேவர்  உரைத்தனர்  என்பது  கருத்து.  புணர்ப்பு:   தந்திரம்  என்ற
பொருள் உடையது.                                        10
 

190.திரைகெழு பயோததி துயிலும் தெய்வவான்
மரகத மலையின் வழுத்தி நெஞ்சினால்
கரகமலம் குவித்து இருந்து காலையில்-
பரகதி உணர்ந்தவர்க்கு உதவு பண்ணவன்.

 

திரை கெழு பயோததி துயிலும்- அலைகள் கெழுமிய பாற்கடலில்
பள்ளிகொண்டிருக்கும்;    தெய்வ    வான்  மரகத  மலையினை-
தெய்வத்தன்மை    பொருந்திய    உயர்ந்த   மரகதமலை   போன்ற
திருமாலை; நெஞ்சினால் வழுத்தி- மனத்தால் வணங்கித் துதித்து; கர
கமலம்   குவித்து
-தாமரை   போன்ற   கைகளைக்  கூப்பி;  இருந்த
காலையில்
- (தியானித்து)  இருந்தபோது;  பரகதி உணர்ந்தவர்க்கு -
மேலான   கதியிது   என   உணர்ந்து    துதிப்பவர்களுக்கு;  உதவு
பண்ணவன்
- காலம் தாழ்த்தாது உதவும்திருமால்

‘வந்து  தோன்றினான்’ என்ற அடுத்த பாடல் தொடருடன் பொருள்
முடிவு  பெறும்.  கெழு:  கெழு  முதல் (பெருகியிருத்தல்)  பயம்: பால்.
உததி:  கடல்;  பயோதறி:  பாற்கடல். மரகதம்: பச்சை நிறமணி. மரகத
மலை:  பச்சை  மாமலை போன்ற திருமால் உணர்த்தும்  உவமையாகு
பெயர்.   பரகதி:   மேலாம்துணை.  பண்ணவன்:   மெய்ஞ்ஞானியாம்.
நெஞ்சினால்  வழுத்தல்:  மனத்தால்  துதித்தல்.   கரகமலம் குவித்தல்:
கைகளால் தொழுதல். கரகமலம்: உருவகம்.                     11
 

191.

கரு முகில் தாமரைல் காடு பூத்து. நீடு
இரு சுடர் இரு புறத்து ஏந்தி. ஏந்து அலர்த்
திருவொடும் பொலிய. ஓர் செம்பொன் குன்றின்மேல்
வருவதுபோல். கழலுன்மேல் வந்து தோன்றினான
 

கருமுகில்-  ஒரு  கருமைநிறமான  மேகம்; தாமரைக்காடு பூத்து-
தாமரை  மலர்த்  தொகுதியை  மலர்த்திக் கொண்டும்; நீடு இரு சுடர்
இருபுறத்தேந்தி
-   நீண்ட   இரு   சுடர்களை  இருபுறத்தும்  ஏந்திக்
கொண்டும்;    ஓர்   செம்பொன்   குன்றின்மேல் வருவதுபோல்-
செம்பொன்னால் ஆகியதொரு மலைமேல் ஏறிவருவதைப்போல; ஏந்து
அலர்த்   திருவொடும்
-   மலர்ந்த   தாமரையில்   அமர்ந்திருக்கும்
இலக்குமியோடும்;   பொலிய   கழலுன்மேல் வந்து தோன்றினான்-
அம்மேரு மண்டபம் பொலிய கருடன்மீது வந்து காட்சி தந்தான்.

கை.   கால். வாய் ஆகிய அனைத்தும் தாமரை போல இருப்பதால்
‘தாமரைக்காடு  பூத்து’  என்றார்.  கருமுகில்  திருமாலையும். தாமரைக்
காடு கை.