பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்127

கால்.  கண்.  வாய் போன்ற  திருமாலின் அங்கங்களையும்.  இரு சுடர்.
சங்கு. சக்கரங்களையும். செம்பொற்குன்று  கருடனையும்  குறித்து நின்ற
உவமை ஆகுபெயர்களாம். கழலுன்: கருடன். பொலிதல்:  திரு வொடும்
பொலிதல்    அல்லதுமண்டபம்    பொலிதல்    என்னும்   பொருள்
உடையதாகும்.  “தோன்றினான்”  என்பதால்  வேறோர் இடத்திலிருந்து
வராது. அம் மண்டபத்திருந்தே யாவரும் காணத்  தோன்றினான் என்ற
கருத்துடையதாகும்.    எங்கும்   எப்போதும்    தோன்றி   மறையும்
தன்மையன் எம்பிரான் என்பது கருத்து.                        12
 

192.

எழுந்தனர்- கறைமிடற்று இறையும். தாமரைச்
செழுந் தவிசு உவந்த அத் தேவும்- சென்று. எதிர்
விழுந்தனர் அடிமிசை. விண்ணுளரொடும்;
தொழும்தொறும். தொழும்தொறும். களி துளங்குவார்
 

கறைமிடற்று  இறையும்- நீலகண்டனாகிய இறைவனும்;  தாமரைச்
செழும்தவிசு    உவந்த    அத்தேவும்
-  தாமரையாகிய   செழித்த
ஆசனத்தனை  விரும்பி  அமர்ந்திருக்கும்   நான்முகனும்;  அடிமிசை
விழுந்தனர்
-திருமாலின் திருவடிகளை வணங்கி; விண்ணுளோரொடும்-
தேவர்களொடும்; எழுந்தனர் எதிர் சென்று-எழுந்தவர்களாகி. அங்குத்
தோன்றிய  திருமாலுக்கு  எதிரே சென்று.  அவரை; தொழும்தொறும்
தொழும் தொறும்
-துதித்துத் தொழும் போதெல்லாம்; களிதுளங்குவர்-
மகிழ்ச்சியால் ஆடுவாராகி நின்றனர்.

சிவபெருமானும்.    நான்முகனும். தேவர்களும் திருமாலுக்கு எதிரே
சென்று  அடிதொழுது.  துதித்து. தொழும் போதெல்லாம்  மகிழ்ச்சியில்
திளைத்து  ஆடுவாராயினர்  என்பது  கருத்து.  கறை:   நஞ்சு. மிடறு:
கண்டம்.  கறைமிடற்றிறை:  சிவபிரான்.  தேவு:  தெய்வம்.  அடிமிசை:
மிசை  ஏழனுருபு.  துளங்கல்: அசைதல் இங்கு ஆடுதலைக்   குறித்தது.
இறை:   ஈசன்   தலைவன்  மேம்பாடுடையவன்  என்னும்   பொருள்
கொண்டது.  கறைமிடற்றிறை  என்பதற்கு மாறாகக்  கடவுளர்க்கு இறை
என்ற பாடமும் உண்டு.                                     13
 

193.

ஆடினர்; பாடினர்; அங்கும் இங்குமாய்
ஓடினர்; உவகை மா நறவு உண்டு ஓர்கிலார்;
‘வீடினர் அரக்கர்’ என்று உவக்கும் விம்மலால்.
சூடினர். முறை முறை துவளத் தாள்- மலர்.

 

அரக்கர் வீடினர் என்று உவக்கும் விம்மலால்-அசுரர்கள் இறந்து
பட்டார்கள்   என   மனம்   மகிழும்   பொருமலால்;   உவகையாம்
நறவுஉண்டு  ஓர்கிலார்
-  (அத்தேவர்கள்) மகிழ்ச்சி என்னும் தேனைப்
பருகி.   எதுவும்   அறியாதவர்களாய்;  ஆடினர்  பாடினர் அங்கும்
இங்குமாய்   ஓடினர்
-   ஆடியும்.   பாடியும்   அங்கும்  இங்குமாய்
ஓடினவர்களாக; துளவத்தாள மலர்முறை முறை சூடினர்-அப்பரமனது
துழாய்  மணக்கும்  பாத  மலர்களை  வரிசை   வரிசையாகச்  சென்று
வணங்கித் தலையில் சூடிக்கொண்டார்கள்.