பக்கம் எண் :

128பால காண்டம்  

களிப்பு     மிகுந்தவர்கள்   ஆடுதலும்   பாடுதலும் இயற்கையாம்.
‘பரமனது  தரிசனமே  தமது  துயரைப்  போக்கும்’  என்ற நம்பிக்கை
உடையவராதலால்  துயருக்கே  காரணமான  அரக்கர்  அழிவர் என்ற
மகிழ்ச்சி   மிகுதியால்   ஆடிப்பாடி   உவந்தனர்   என்பது  கருத்து.
உவகையை நறவாக உருவகித்தார். விம்மல்: பொருமல்.            14
 

194.

பொன்வரை இழிவது ஓர் புயலின் பொற்பு உற.
என்னை ஆள் உடையவன் தோள்நின்று எம்பிரான்.
சென்னி வான் தடவும் மண்டபத்தில் சேர்ந்து. அரி
துன்னு பொற் பீடமேல் பொலிந்து தோன்றினான்.
 

பொன்வரை இழிவதோர்  புயலின்  பொற்பு   உற  - பொன்
மலையாகிய மேருவிலிருந்து   கீழே  இறங்குகின்ற   ஒரு  மேகத்தின்
அழகுதோன்ற; என்னை ஆள் உடையவன் தோள் நின்று- என்னை
ஆளாக   ஆட்கொண்டிருக்கும்   கலுழனுடைய  தோள்களில் இருந்து;
வான்தடவும்  சென்னி  மண்டபத்தில் சேர்ந்து - ஆகாய மளாவிய
சிகரத்தை   உடைய   அம்   மண்டபத்தை   அடைந்து; அரிதுன்னு
பொற்பீடமேல்
-  சிங்கவடிவுடைய   பொன்    ஆசனத்தின்  மேல்;
எம்பிரான் பொலிந்து தோன்றினான்
-  எம்பெருமானாகிய  திருமால்
பொலிவுறத் தோன்றலானான்.

பெரிய     திருவடி என்றழைக்கப்படும்    திருமாலின் ஊர்தியான
கருடனை    “என்னை   ஆளுடையவன்”   என்று    சிறப்பிக்கிறார்.
‘பொன்வரை’  என்று  கூறுவதால்  கருடனது   நிறமும்  மேன்மையும்
புலனாகும். அரிதுன்னு பொற்பீடம்: சிங்காதனம்.

‘தேவர்கள் இருந்த இடத்தில் வந்து காட்சிதந்த திருமால் கருடனது
தோளிலிருந்து       இறங்கி       அம்மண்டபத்தே     இடப்பட்ட
சிங்காசனத்தின்மேல்  வீற்றிருந்தான்’  என்பது கருத்து. தோள்:  பிடர்
அரி: சிங்கம் (எல்லா மிருகங்களையும் அழிக்க வல்லது)          15
 

195.

விதியொடு முனிவரும். விண்ணுளோர்களும்-
மதி வளர் சடைமுடி முழுவலாளனும்
அதிசயமுடன் உவந்து. அயல் அருந்துழி-
கொதி கொள் வேல் அரக்கர்தம் கொடுமை கூறினார்.

 

விதியொடு     முனிவரும் விண் உளோர்களும் - நான்முகனும்.
முனிவர்களும்  விண்ணுலகில் வாழும் தேவர்களும்; மதிவளர்சடைமுடி
மழுவலாளனும்
-   பிறைச்   சந்திரன்   வாழும்   சடை  முடியுடைய.
மழுவாளியான சிவபிரானும்; அதிசயமுடன் உவந்து அயல் இருந்துழி
-   மிகுந்த   வியப்புடன்.   மகிழ்ந்து  திருமாலுக்கு   அருகிலமைந்த
ஆசனங்களில்   இருந்த   போது; கொதிகொள்வேல்   அரக்கர்தம்
கொடுமை   கூறினார்
-  கொதிக்கும்  வேலை  உடைய அரக்கர்களது
கொடுந்தொழிலைச் சொன்னார்கள்.