பக்கம் எண் :

188பால காண்டம்  

என்புழி:  என்றபோது.  ‘உழி’   ஏழனுருபு   காலம்  உணர்த்திற்று.
வள்ளுவர்: தோற்கருவி கொண்டு  பறை சாற்றுபவர்.  அரசனது உள்படு
கருமத் தலைவர் இவரென்பர். யானை மேல்  அமர்ந்து  பறை முழக்கிச்
செய்தியை  அறிவிக்கும்  உரிமை  உடையவர்கள்.   மீமிசை:  அடுக்கி
வந்த   ஏழனுருபு   மிக  மேலே  என்பதைக்   குறிக்கும்.   நன்பறை:
நல்லபறை.  எதுகை  நோக்கி’ல்’  என்பது ‘ன்’  ஆகத் திரிந்தது. பிறழ்:
உவம  உருபு.  நுசுப்பு:  இடை  விம்மல்:  களித்தல்  அளக்கர்: கடல்.
மன்னன்  கூறிய  செய்தியை  மக்களுக்கு.   வள்ளுவர்   யானைமேல்
அமர்ந்து  பறையறிந்து தெரிவித்தனர். அது  கேட்டு  நகரத்து மக்களும்
பெண்களும் பெரு மகிழ்ச்சியால் அளப்பதற்கு அரிய  இன்பக்  கடலை
அடைந்தனர் என்க.                                        113
 

293.ஆர்த்தனர் முறை முறை
   அன்பினால்; உடல்
போர்த்தன புளகம்; வேர்
   பொடித்த; நீள் நிதி
தூர்த்தனர். எதிர் எதிர்
   சொல்லினார்க்கு எலாம்;-
‘தீர்த்தன்’ என்று
   அறிந்ததோ அவர்தம் சிந்தையே?

 

முறைமுறை    அன்பினால்  ஆர்த்தனர்  -  (நகர  மக்களும்
பெண்களும்)  முறையாகக் கூடி அன்பின் மிகுதியால் ஆரவாரித்தனர்;
உடல்  புளகம்  போர்த்தன  
-  எல்லோருக்கும் உடல் புளகத்தால்
மூடப்பட்டன;    வேர்    பொடித்த    -   வியர்வை  பெருகியது;
சொல்லினார்க்கு   எலாம்  நீள்நிதி  எதிர்  எதிர்  தூர்த்தனர்
-
பிள்ளைகள்   பிறந்த   செய்தியைச்  சொன்னவர்களுக்கெல்லாம் எதிர்
எதிரே  நிறைந்த  செல்வத்தை  வாரி வழங்கினர்;  அவர்தம் சிந்தை
தீர்த்தனன் என்று அறிந்ததே  
-  அந்த   நகர   மக்களின்  மனம்
(வந்து பிறந்தது) வணங்கத்தக்க பெருமான் என்பதை அறிந்தது போலும்.

‘முறை     முறை’    பலமுறையாக   என்னும்  குறிப்பு.  புளகம்:
மயிர்க்கூர்சசெறிதல்   ‘இதனைப்’   புளகாங்கிதம்    என்பர்.   வேர்:
வியர்வை. பொடித்த: பொடித்தன (தோன்றின). நிதி: செல்வம்.  தூர்தல்
மறைத்தல்  (மூடுதல்). செல்வத்தால் நிலத்தையே மறைத்தனர்  என்பது
கருத்து.  எதிர்  எதிர்:  ஒருவருக்கொருவர்  எதிராக நின்று  என்பதும்
பொருளாம்.  தீர்த்தன்:  தூயவன்  வழிபடத்  தக்க   திருமாலே வந்து
தோன்றினான் என அறிந்ததோ ‘ஓ’ வியப்புப் பொருள் தந்து   நின்றது.
சிந்தை:  மனம்.  அயோத்தி  நகர  மக்கள் அளவற்ற பெரு  மகிழ்ச்சி
அடைந்தனர்.   ‘திருமாலே  அவதரித்தான்  என  அவர்கள்   மனம்
அறிந்ததோ’  என்கிறார். ஆர்த்தனர் என்றதால் வாக்கும்.  அன்பினால்
என்றதால்  மனமும். வேர் பொடித்தன என்பதால் உடலும்  மகிழ்ந்தது
கூறப்பட்டன என்க. ‘ஏ’ அசை. நீள் நிதி: பண்புத் தொகை.       114
 

294.பண்ணையும் ஆயமும். திரளும் பாங்கரும்.
கண் அகன் திரு நகர் களிப்புக் கைம்மிகுந்து.