பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்189

எண்ணெயும் களபமும். இழுதும். நானமும்.
சுண்ணமும். தூவினார் - வீதிதோறுமே
 

பண்ணையும்    ஆயமும்  -  பெண்கள் கூட்டத்திலும் தோழிகள்
கூட்டத்திலும்:  திரளும் பாங்கரும் - ஆண்கள்  கூட்டத்திலும்  தோழர்
கூட்டத்திலும்;  கண்  அகன்திரு  நகர்  - இடமகன்ற அந்த அழகிய
நகரத்திலே;  களிப்புக் கைமிகுந்து- மகிழ்ச்சி மேலிட்டு; எண்ணெயும்.
களபமும்.   இழுதும்.   நானமும்.  
-எண்ணெய்.   கலவைச்  சாந்து.
வெண்ணெய்  புழுகு  வகைகளையும்;  சுண்ணமும் -  பரிமளப் பொடி
வகைகளையும்;  வீதி  தோறும்  தூவினார்  -  ஒவ்வொரு வீதியிலும்
தூவினார்கள்.

பண்ணையும்     திரளும். ஆயமும்   பாங்கரும்  என  வேறுபாடு
தோன்றக் கூறியது கருதத்தக்கது. கண் அகன்:  ஒரு பொருட்பன்மொழி.
கைமிகல்:   அதிகப்படுதல்.   திருநகர்:  அழகிய  நகரம்.   எள்+நெய்:
எண்ணெய்  எனினும் எல்லா வகைகளையும்  குறித்து  நின்றது: நாணம்:
புனுகு (கஸ்தூரியுமாம்). சுண்ணம்: பரிமளப் பொடி.

மன்னனுக்கு     மைந்தர்   பிறந்த   மகிழ்ச்சியால்   வீதிதோறும்
எண்ணெயும்.    களபமும்.   இழுதும்.    நானமும்   தூவி    மக்கள்
மகிழ்ச்சியைக் கொண்டாடினர் என்பது குறிப்பு.  ‘’எண்ணெய்  சுண்ணம்
எதிரெதிர்  தூவிட’’  என்ற பெரியாழ்வார் பாசுரம்  நினைவுகூரத்தக்கது.
மூன்று  பாடல்களாலும் வள்ளுவர் பறையறை  செய்தியும் நகர மாந்தர்
மகிழ்வும் கூறப்பட்டது.                                      115
 

295.இத்தகை மா நகர். ஈர் - அற நாளும்
சித்தம் உறும் களியொடு சிறந்தே.
தத்தமை ஒன்றும் உணர்ந்திலர்; தாவா
மெய்த் தவன் நாமம் விதிப்ப மதித்தான்.
 

இத்தகைய  மாநகர்- இந்த விதமாக அயோத்தி நகர மக்கள்; ஈர்
அறு  நாளும்  
- அந்தப்  பன்னிரண்டு  நாட்களும்;  சித்தம் உறும்
களியொடு   சிறந்து   
-  மனம்  பொருந்திய  மகிழ்ச்சியால் சிறந்து;
தத்தமை  ஒன்றும்  உணர்ந்திலர்  
-  தங்கள் தங்களையே ஒன்றும்
உணராதவர்  ஆயினர்;  தாவா  மெய்த்தவன் - குறையாத தவத்தை
உடைய   வசிட்ட  முனிவன்;  நாமம்  விதிப்ப மதித்தான்  - அக்
குழந்தைகளுக்குப் பெயர் சூட்ட எண்ணினாள்.

தகை:   தன்மை. மா: அழகு; பெருமையுமாம். அரச குலத்தவருக்குப்
பிறந்த   பன்னிரண்டு   நாட்கள்  கழிந்த  பிறகே  பெயர்   சூட்டுதல்
விதியாதலின்  ‘’ஈர்  அறு நாள்’’ என்றார். ‘’பத்தும் கடந்த  இரண்டாம்
நாள்’’  என்பர்  பெரியாழ்வாரும்.  உறு:  மிகுதி. சித்தம்:  மனம். களி:
களித்தல். தத்தமை: தங்கள் தங்களை. மாநகர் எழுவாய்;   உணர்ந்திலர்
பயனிலை.  அந்நகரத்தார்  உணர்ந்திலர்  என்பது  பொருள்.   நாமம்
விதித்தல்: பெயர் சூட்டுதல்.

பிள்ளைகள்      பிறந்த    பன்னிரண்டு    நாட்களும்  அளவற்ற
மகிழ்ச்சியால்  அந்நகர  மக்கள்   தங்களையே   மறந்து  மகிழ்ச்சியில்
திளைத்தனர். பன்னிரண்டு