பக்கம் எண் :

190பால காண்டம்  

நாட்கள்    கழிந்த   பின்னர்   வசிட்டர்   குழந்தைகளுக்குப்  பெயர்
சூட்டக் கருதினார் என்பது கருத்து.                           116
 

296.கரா மலை. தளர் கைக் கரி எய்த்தே.
‘அரா-அணையில் துயில்வோய்!’ என. அந் நாள்.
விராவி. அளித்தருள் மெய்ப்பொருளுக்கே.
‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனன் அன்றே.

 

கரா மலைய-ஒரு முதலை காலைக் கவ்விக் கொண்டு வருத்த; தளர்
கைக்கரி  
-  அதனால்  சோர்வுற்ற துதிக்கையை உடைய யானையான
கஜேந்திரன்;  அரா அணையில்  துயில்வோய் என - பாம்பணையில்
துயில்பவனே  என அழைக்க; அந்நாள் விராவி அளித்தருள் -அந்த
நாளிலே   விரைந்து   அந்த   முதலையை   அழித்து   யானையைக்
காத்தருளிய;    மெய்ப்பொருளுக்கு    -   உண்மைப்  பொருளான
அப்பரமனுக்கு; ‘இராமன்’ எனப் பெயர் ஈந்தனர் - இராமன் என்னும்
பெயரை (வசிட்டன்) சூட்டினான்.

கரா:      முதலை.   தளர்   கரி:   வினைத்தொகை.   எய்த்தல்:
இளைத்தலுமாம். அராஅணை: அரவணை (பாம்புப் படுக்கை).  விராவி:
சேர்தலுமாம்.   அராஅணைத்   துயில்வோய்  என  விளித்து   தான்
பன்னாள்  துன்புறவும் அது பற்றிக் கவலை உறாமல்  உறங்குகின்றாயே
பெருமானே   என்ற   குறிப்புடையது.   மெய்ப்பொருள்:   உண்மைப்
பொருளாகிய பரமன். ராமன்: அழகன். அன்றே: அசை.           117
 

297.கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப
விரத மறைப் பொருள் மெய்ந்நெறி கண்ட
வரதன். உதித்திடு மற்றைய ஒளியை.
‘பரதன்’ எனப் பெயர் பன்னினன் அன்றே.

 

கரதலம் உற்று ஒளிர் நெல்லி கடுப்ப - உள்ளங்கையில் விளங்கும்
நெல்லிக்கனியைப் போல; விரத  மறைப் பொருள் மெய் நெறிகண்ட
வரதன்     
-     விரதங்களைக்    கடைப்பிடித்தும்    மறைகளின்
பொருளறிந்ததும்  உண்மை  நெறி கண்டுணர்ந்த வசிட்டன்; உதித்திடு
மற்றைய  ஒளியை
- அடுத்துத் தோன்றிய ஒளிமயமான  குழந்தையை;
பரதன்  எனப்  பெயர்  பன்னினன்
-  பரதன்  என்னும் பெயரிட்டு
அழைத்தான்.

கரதலம்: உள்ளங்கை. உள்ளங்கையில் கொண்ட நெல்லிக் கனி. ஒரு
பொருளை   உள்ளும்   புறமும்.   ஒன்றாய்   அறிதற்குக்   காட்டும்
உவமையாகக் கொண்டு கூறுவர் பெரியோர். புறத்தே இத்தனை வரிகள்
இருப்பதால்   அகத்தே  இத்தனை  வரிகள்  இருக்கும்  என்று   கூற
இயல்வதால்  ‘’அங்கைக் கனி’’ என்ற உவமை கூறப்படும்.  மறைகளின்
உண்மைப்  பொருளை  நன்கறிந்து  வசிட்டனது  பெருமை   இதனால்
புலனாகும்.  கடுப்ப:  ஒப்ப  (போல). விரத நெறியால்  மறைப்பொருள்
கைவரும். அதன் காரணமாக மெய்ந்நெறி துலங்கும் என்பது