பக்கம் எண் :

  திரு அவதாரப் படலம்191

கருத்து.    இராமனை  மெய்ப்பொருள்  என்றும். மற்றைய மூவரையும்
‘ஒளி’   என்றது   கருதத்தக்கது.   பன்னுதுல்:  சொல்லுதல்.  அன்றே:
அசை.                                                  118
 

298.உலக்குநர் வஞ்சகர்; உம்பரும் உய்ந்தார்;
நிலக்கொடியும் துயர் நீத்தனள்; இந்த.
விலக்க அரு மொய்ம்பின் விளங்கு ஒளி நாமம்.
‘இலக்குவன்’ என்ன. இசைத்தனன் அன்றே.

 

உலக்குநர்    வஞ்சகர்  -  இனி வஞ்சர்களாகிய அரக்கர்கள்தாம்
இறப்பவர்களாவார்;   உம்பரும்  உய்ந்தார்  -    தேவர்கள்  உய்வு
பெறுவார்கள்; நிலக் கொடியும் துயர் நீத்தனள் - நிலமகளும் துன்பம்
நீங்கினாள்;   விலக்க   அரும்  மொய்ம்பின் -(இத்தகைய  பேற்றை
உலகுக்குத்  தரும்)  நீக்க  இயலாத  வலிமை உடைய; இந்த விளங்கு
ஒளிநாமம்
-இந்த விளங்குகின்ற ஒளியின் பெயர்; இலக்குவன் என்ன
இசைத்தனர்
-இலக்குவன் என்று கூறினான்.

உலக்குநர்:     அழிபவர் (உலத்தல்:  அழிதல்).  உம்பர்: தேவர்கள்
இடவாகு  பெயர்.  நிலக்கொடி: நிலமகள்; கொடி:  உவமை  ஆகுபெயர்.
நீத்தல்: நீக்கல். மொய்ம்பு. வலிமை. இசைத்தனன்: கூறினான்.

சுமித்திரை     பெற்ற பிள்ளைக்கு  ‘இலக்குவன்’  என்று வசிட்டன்
பெயர்  சூட்டினான் என்பது கருத்து. ல?க்ஷ்மணன்  என்பதற்கு உத்தம
இலக்கணங்கள்    அமையப்    பெற்றவன்    எனவும்.    கைங்கரிய
லட்சுமியோடு  கூடியிருப்பவன்  என்பதும் பொருள் என்பர்.   நிலமகள்
துயரம் நீங்குவது உறுதியாதலில் ‘நீத்தனன்’ என்றார்.             119
 

299.‘முத்து உருக்கொண்டு செம் முளரி அலர்ந்தால்
ஒத்திருக்கும் எழிலுடைய இவ் ஒளியால்
எத் திருக்கும் கெடும்’ என்பதை எண்ணா.
‘சத்துருக்கன்’ எனச் சாற்றினன் நாமம்.

 

முத்து   உருக்கொண்டு  -  முத்துக்கள்  சேர்ந்து குழந்தை வடிவு
கொண்டு;  செம்முளரி  அலர்ந்தால்-  செந்தாமரை தன்னிடம் மலரப்
பெற்றால்;  ஒத்திருக்கும்  எழில்  உடை -  (அதனை)  ஒத்திருக்கும்
அழகுடைய;  இவ்வொளியால்  எத்திருக்கும் எண்ணா -  என்பதை
எண்ணி;  சத்துருக்கன்  என நாமம் சாற்றினன்- சத்துருக்கன் எனப்
பெயர் சூட்டினான்.

முளரி:  தாமரை. எழில்: அழகு. திருக்கு: மாறுபாடு (குற்றம்) நாமம்:
பெயர்.   சத்துருக்களை  அழிப்பவன்  என்பது   பொருள்.   முதலடி:
இல்பொருள் உவமை. அகப்பகை - புறப்பகைகளை  ஒழிக்க  வல்லவன்
என்பதும்  ஒரு  பொருள்.  சத்துருக்கன்  வெண்மை   நிறமுடையவன்
என்பதால்‘’ முத்து உருக்கொண்டு’’ என்றார். கை. கால்.  முகம் மலர்ந்த
தாமரை ஒத்திருந்தது என்பதால்