பக்கம் எண் :

196பால காண்டம்  

லும்.  அதனோடு  பொருந்திய  நூலியையும் போன்று; நிலை திரிவார்
- நிலையிலே திரிவார்கள்.

நிலை     திரிதல்:  ஒரு   நிலையிலிருந்து  மற்றொரு  நிலைக்குச்
செல்லுதலுமாம்.   நிலமகள்   செய்தவத்தையும்.  அதனால்  அடைந்த
பொருட்  பேற்றையும்  தெரிய   விரும்புவார்  போல.  ஆறு. சோலை.
குளம்  ஆகிய  எல்லா இடங்களிலும்  ராமனும்  இலக்குவனும் சேர்ந்து
திரிந்தனர் என்பது கருத்து. இராமனும்  இலக்குவனும்  இணைபிரியாமை
கூறப்பட்டது.                                             127
 

307.பரதனும் இளவலும். ஒருநொடி பகிராது.
இரதமும் இவுளியும் இவரினும். மறைநூல்
உரைதரு பொழுதினும். ஒழிகிலர்; எனை ஆள்
வரதனும் இளவலும் என மருவினரே.

 
 

பரதனும் இளவலும் ஒரு நொடி பகிராது-பரதனும். சத்துருக்கனும்.
ஒரு  நொடிப்பொழுதேனும் பிரியாது; இரதமும் இவுழியம் இவரினும்-
தேரிலும்.  குதிரையின்  மீதும்  ஏறிச் சவாரி செய்யும் போதும்;  மறை
நூல்  உரைதரு  பொழுதினும்
-வேதம் முதலிய நூலக்ளை ஓதுகின்ற
காலத்தினும்;  ஒழிகிலர்  -பிரியாதவர்களாகி;  எனை ஆள் வரதனும்
இளவலும்  என  
-  என்னை  ஆட்கொண்டருளிய  ராமபிரானையும்.
இலக்குவனையும் போல; மருவினர் - சேர்ந்திருந்தனர்.

நொடி:     கை  நொடிப்  பொழுது.   இதனை  மாத்திரை என்பர்.
தொழிலாகு  பெயராய்.  கால  அளவை  உணர்த்தி  நின்றது. இவர்தல்:
ஏறுதல்.  உரைதருதல்:  ஓதுதல்.  ஒழிகிலர்: முற்றெச்சம்.  ஆள்வரதன்:
வினைத்தொகை.  வரதன்: வரம் தரவல்லன். இவுளி: குதிரை.  பகிராது:
பிரியாது.

பரதனும்.     சத்துருக்கனும் தேரேறிச் சென்றாலும். குதிரைச் சவாரி
செய்தாலும்  வேதம்   முதலான   கலைகளை ஓதினாலும் ஒரு நொடிப்
பொழுதும்  பிரியாதவராகி   இராமனையும்.   இலக்குவனையும் போலச்
சேர்ந்திருந்தனர்  என்பது  கருத்து.   பரத.  சத்துருக்கனரின் ஒட்டுறவு
கூறப்பட்டது.                                             128
 

308.வீரனும். இளைஞரும். வெறி பொழில்களின்வாய்.
ஈரமொடு உறைதரு முனிவரரிடை போய்.
சோர் பொழுது. அணிநகர் துறுகுவர்; எதிர்வார்.
கார் வர அலர் பயிர் பொருவுவர். களியால்.

 
 

வீரனும்   இளைஞரும்- மாவீரனாகிய ராமபிரானும்.  தம்பியரும்;
வெறிபொழில்களின்   வாய் 
-  மணம்  செறிந்த  சோலைகளிடத்தே
(சென்று);    ஈரமொடு   உரைதரு  -   அன்போடு   (வந்தவரிடம்)
உரையாடுகின்ற; முனிவரர் இடைபோய் -முனிவர்களிடம்  (காலையில்)
சென்று;  சோர்  பொழுது அணிநகர் துறுகுவர்-மாலைப் பொழுதிலே
அழகிய அயோத்தி நகரை அடைவர்; எதிர்வார் - போகும்