தருவனத்துள் யான் இயற்றும் - மரங்கள் நிறைந்துள்ள காட்டில் நான் செய்கின்ற; தவவேள்விக்கு இடையூறா - பெரிய யாகத்துக்கு இடையூறாக; தவம் செய்வோர்கள் வெருவர - தவம் செய்பவர்கள் அஞ்சும்படியாக; சென்று அடைகாம வெகுளி என - அவர்தம் மனத்தைச் சென்று சேர்ந்த காமம். வெகுளி மயக்கங்களைப் போல; நிருதர் இடைவிலக்காவண்ணம் - அரக்கர்கள் கெடுக்காதபடி; செருமுகத்துக் காத்தி என - அவர்களோடு செய்யும் போர் முகத்திலே காத்தருள் வாயாக என; நின் சிறுவர் நால்வரினும் - உன்புத்திரர்கள் நால்வர்களுள்; கரிய செம்மல் ஒருவனை - கருமை நிறம் பொருந்திய செம்மலாகிய ஒப்பற்றவனை; தந்திடுதி என - அளித்திடுவாயாக என்று; உயிர் இரக்கும் கொடும் கூற்றின் - உயிரைத் தாவெனக் கேட்கும் கொடிய கூற்றுவனைப் போல; உளையச் சொன்னான் - மன்னன் மனம் வருந்தும்படி முனிவன் கூறினான். ‘தருவனம்’ - மரங்கள் அடர்ந்த வனம். தவவேள்வி - நிஷ்காம்ய வேள்வி என்பர். இடையூறு: தீமை. ‘ஊறு’ முதல்நிலை திரிந்த தொழிற் பெயர். செருமுகம் போர்முனை. காத்தி: ஏவலொருமை வினைமுற்று. இரத்தல்: யாசித்தல். கொடும் கூற்று: கொடிய கூற்றுவன் (எமன்) கொடிய சொல் எனவும் கொள்ளலாம். உளைதல்: மனம் வருந்துதல்.11 |