பக்கம் எண் :

208பால காண்டம்  

வேல்  பாய்ந்த:  புண்ணில்  ஆம் பெரும் புழையில் - புண்ணாகிய
புழையிலே;  கனல்  நுழைந்தால் என - கனன்று கொண்டிருக்கும் தீ
நுழைந்தது போல; செவியில் புகுதலோடும் - தனது காதுகளில் புகுந்த
போது;  உள்  நிலாவிய துயரம்  பிடித்து  உந்த  -  உள்ளத்திலே
நிலைத்துள்ள  துயரம்  (உயிரை) வெளியே தள்ள; ஆர் உயிர் நின்று
ஊசல்  ஆட
 -  தயரதனது  அவ்வரிய  உயிர்  (உள்ளே போகவும்.
வெளியே  வரவுமாக)   ஊசல்போல்   ஆட;   கண்இலான்  பெற்று
இழந்தான் என
 - கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர்
இழந்தான் எனக்  கூறும்படி; காலவேலான் கடுந்துயரம் உழந்தான் -
பகைவனின்   உயிருக்கு   இறுதிக்காலம்   காட்டும்    வேலையுடைய
தயரத வேந்தன் கடுமையான துன்பத்தினாலே மிகு வருந்தினான்.

உள்  நிலாவிய துயரமாவது தயரதன் சிரவணனை அம்பால் கொல்ல
அவனது  பெற்றோர்  தந்த  சாபத்தால்  நிலவிய  துன்பமாம்.   உந்த:
தள்ள.  கண்  இலான்:  பிறவிக்குருடன்.  இடையில்   கண்   பெற்றும்
மீண்டும்   இழத்தல்  பெருந்துயர்  விளைவிக்கும்.    பிள்ளையில்லாத
தயரதன்  பெற்று.  பிரிவதால்  பெருந்துயர்   கொண்டான்  என்பதற்கு
உவமையாயிற்று.                                           12
   

326.தொடை ஊற்றின் தேன் துளிக்கும் நறுந் தாரான்
   ஒருவண்ணம் துயரம் நீங்கி.
‘படையூற்றம் இலன். சிறியன் இவன்; பெரியோய்!
   பணி இதுவேல். பனி நீர்க் கங்கை
புடை ஊற்றும் சடையானும். புரந்தரனும்
   நான்முகனும். புகுந்து செய்யும்
இடையூற்றுக்கு இடையூறாய். யான் காப்பென்;
   பெரு வேள்விக்கு எழுக!’ என்றான்.
   

தொடை   ஊற்றின்  தேன் துளிக்கும்  - தொடையின் ஊற்றுப்
போலத்  தேன்  துளிக்கின்ற;  நறுந்தாரான்  ஒரு வண்ணம் துயரம்
நீங்கி
- மணம் பொருந்திய  மாலையணிந்த தயரதன் ஒருவாறு துயரம்
நீங்கியவனாய்;    படை   ஊற்றம   இலன்   சிறியன்  இவன்  -
படைக்கலப்  பயிற்சியில்  முதிர்ச்சி   அடையாத   சிறுவயதுடையவன்
இவ்விராமன்;   பெரியோய் -  தவத்திலும்.  மற்யை  சிறப்புக்களிலும்
பெரியோரே!;  பணி   இதுவேல்  -   எனக்குத்   தாங்கள்   இடும்
கட்டளை    இதுவேயானால்;   பனிநீர்க்  கங்கைபுடை    ஊற்றும்
சடையானும்
 - குளிர்ந்த நீரையுடைய கங்கை பக்கங்களில்    ஊற்றிக்
கொண்டிருக்கும்    சடைமுடியையுடைய  சிவபிரானும்;  நான்முகனும்.
புரந்தரனும்
- நான்கு முகங்களை  உடைய  பிரமனும்     இந்திரனும்;
புகுந்து   செய்யும்    இடையூற்றுக்கு   -    அவ்வரக்கர்களுக்குத்
துணையாக  வந்து   புகுந்து  செய்கின்ற  தீங்குகளுக்கு;   இடையூறா
நான்  காப்பென்
- தடையாக  நின்று  நான்   காக்கிறேன்;   பெரு
வேள்விக்கு  எழுக  என்றான்
  -  (நீங்கள்  செய்யத்   தொடங்கிய
அந்தப்)  பெரிய  வேள்வியை நிறைவேற்ற  இப்போதே  எழுந்தருள்க
என்றான்.