பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்237

தாடகையின்   பற்களை  ‘மதித்திண்  பாகம் எனும் எயிறு’ என்றார்
‘சந்திரனது  திண்ணிய  ஒரு  பகுதியோ   என்று   நினைக்கும்படியான
பற்கள்’ என்பது பொருள் உய்த்து: செலுத்தி  என்பது பொருள்.  ஆகம்:
மார்பு  ஆகம்  உறு:  மார்பில்   பொருந்தும்படி  வீசுவேன்  என்றாள்
என்பது பொருளாகும்.                                      35
 

374.
 

அண்ணல் முனிவற்கு அது
   கருத்துஎனினும். ‘ஆவி
உண்’ என. வடிக் கணை
   தொடுக்கிலன்; உயிர்க்கே
துண்ணெனும் வினைத்தொழில்
   தொடங்கியுளளேனும்.
‘பெண்’ என மனத்திடை
   பெருந்தகை நினைந்தான்.
 

அண்ணல்  முனிவற்கு  -  பெருமை  பொருந்திய   விசுவாமித்திர
முனிவனுக்கு;  அது  கருத்து எனினும் - அந்த அரக்கியை. கொல்வது
தான் கருத்து  என்றாலும்; ஆவி உண் எனவடிக்கணை தொடுக்கிலன்
- அவள்  உயிரை   உண்டுவா   வென்று   கூரிய   அம்பை  ராமன்
விடவில்லை; உயிர்க்கே  துண்  எனும்  -  உயிர்களெல்லாம் நடுங்கி
அஞ்சுமாறு    வினைத்தொழில்   தொடங்கி  உள்ளேனும்  -  கெட்ட
செயலைத் தொடங்கியுள்ளாள்  என்றாலும்;  பெருந்தகை. பெண் என
மனத்திடை  நினைந்தான்  
- பெருந்தைமை உடைய இராமன் அவள்
பெண் ஆயிற்றே என்று மனத்தில் எண்ணலாயினான்.

அண்ணல்:     வெருமையுடையவன். அது: தாடகையைக் கொல்வது.
துண்;   நடுக்கம்.   பெருந்தகை:  இராமன்   (அன்மொழித்   தொகை).
பெண்கொலை     என்பதால்     -     முனிவன்     விரும்பினாலும்
பெருந்தகையான  இராமன்  விரும்பவில்லை   என்பதால் ’’ஆவி உண்
என  வடிக்கணை தொடுக்கிலன் பெண்என  மனத்திடை  நினைத்தான்’’
என்றார்.                                                 36
 

375.
 

வெறிந்த செம் மயிர் வெள் எயிற்றாள். தனை
எறிந்து கொல்வென் என்று ஏற்கவும். பார்க்கிலாச்
செறிந்த தாரவன் சிந்தைக் கருத்து எலாம்
அறிந்து. நான்மறை அந்தணன் கூறுவான்.
 

வெறிந்த  செம்மயி்ர் வெள் எயிற்றாள் தனை  -  தீய    நாற்ற
முடையவளும்  சிவந்த  தலைமயிரும்.  வெண்மையான     பற்களையும்
உடையவளுமான   அந்தத்   தாடகை; எறிந்து  கொல்வென்  என்று
ஏற்கவும்  
-  சூலத்தைச் செலுத்திக் கொல்லுவேன் என்று கூறி. கையில்
ஏற்றபொழுதும்  கூட;  பார்க்கிலாச்  செறிந்ததாரவன்  -  அதனைக்
கண்டுகொள்ளாத  அடர்ந்த  மாலையை  அணிந்துள்ள  இராமபிரானது;
சிந்தைக்கருத்தெலாம்  அறிந்து   
-  உள்ளக்  கருத்தை   யெல்லாம்
உணர்ந்து; நான்மறை