பக்கம் எண் :

238பால காண்டம்  

அந்தணன்    கூறுவான்    -    நான்கு    வேதங்களிலும்   வல்ல
அந்தணனாகிய விசுவாமித்திரன் கூறுவானானான்.

வெறிந்த:   மணம் வீசுகின்ற (இங்குத் தீயநாற்றம் வீசுகின்ற).  சிவந்த
கூந்தலை   உடையவளாதலின்   ‘   செம்மயிர்’   என்றார்.    ஏற்றல்:
ஏற்றுக்கொள்தல்.  பார்க்கிலா:  ஈறுகெட்ட  எதிர்மறைப்    பெயரெச்சம்.
ராமன்  வாய்திறந்து  கூறவில்லையாயினும்;  மனத்திடை   நினைந்ததை
அறிந்த முனிவனை ‘’நான்மறை அந்தணன்’’ எனச் சிறப்பித்தார்.    37
 

376.‘தீது என்றுள்ளவை யாவையும் செய்து. எமைக்
கோது என்று உண்டிலள்; இத்தனையே குறை;
யாது என்று எண்ணுவது? இக் கொடியாளையும்.
மாது என்று எண்ணுவதோ? மணிப் பூணினாய்!
 

தீது  என்று  உள்ளவையாவையும்  செய்து   -   தீமை  என்று
இருப்பவையாகிய  எல்லாச்  செயல்களையும்    செய்துமுடித்து;  எமை.
கோது   என்று  உண்டிலள்  
-  எம்மைப்  போன்ற  முனிவர்களைச்
(சாரமில்லாத)  சக்கை  என்று  உண்ணாது   விட்டனள்;  இத்தனையே
குறை  
-  அவள் செய்த தீய செயல்களில்   இவ்வளவவே குறை; யாது
என்று  எண்ணுவது  
-  இத்தகையவளை   என்னவென்று நினைப்பது;
இக்கொடியாளையும்  
-  இத்தகைய  கொடுஞ்செயல்  உடையவளையும்;
மணிப்பூணினாய்  
- மணிகளாலான  அணிகலன்களை அணிந்திருக்கும்
ராம பிரானே!; மாது என்று எண்ணுவதோ - பெண் என்று நினைத்தல்
ஒண்ணுமே? கூடாது என்றபடியாம்.

தீது:   தீய  செயல்கள்.  உள்ளவை:  குறிப்பு   வினையாலணையும்
பெயர்.  எம்  உளப்பாட்டுப்  பன்மை.  கோது:    சாரமற்றது  (சக்கை).
குற்றம்  குறை:  குறைவு. அரசகுமாரன் என்பதால்   ‘’மணிப்பூணினாய்’’
என்றார்.                                                 38
 

377.‘நாண்மையே உடையார்ப் பிழைத்தால். நகை;
வாண்மையே பெற்ற வன் திறல் ஆடவர்
தோண்மையே இவள் பேர் சொலத் தோற்குமேல்.
ஆண்மை என்னும் அது ஆரிடை வைகுமே?
 

நாண்மையே  உடையார்ப் பிழைத்தால் நகை- நாணம்  முதலான
பெண்மைக்  குணம்  உடையவர்களுக்குத்  தீங்குசெய்தால்  அது கண்டு
வீரம்   மிக்க  ஆடவர்  நகைத்துப்  பரிகசிப்பர்; வாண்மையே பெற்ற
வன்திறல்  ஆடவர்  தோண்மையே   
-   வாள்முதலான   போர்க்
கருவிகளில்     வல்ல     வலிமைமிக்க    வீரர்களான   ஆண்களின்
தோளாற்றலும்; இவள் பேர் சொலத் தோற்கு மேல் - இத்தாடகையின்
பெயரைச்   சொல்லக்  கேட்டவுடன் தோற்று விடுமென்றால்; ஆண்மை
என்னும்  அது  ஆரிடை  வைகும்
- ஆண்மை என்று கூறும் அந்த
அஞ்சாத பண்பு யாரிடம் இருக்கும். (சிந்தித்துப்பார்) என்றபடி.