பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்239

நாண்மை:   நாணம்.   உடையார்:    உடையாரை.    பிழைத்தால்:
தவறுசெய்தால்.  நகை:  சிரிப்புக் கிடமாகும்.  வன்திறல்:  வலியதிறமை.
தோண்மை:   தோளாற்றல்  ஆண்மை  யாரிடம்  இருக்கும்?   பெண்
வடிவுடைய   இவளிடமா?  இவள்  பெயரைக்  கேட்டதும்  தோற்கும்
ஆண்களிடமா?  என்று  கேட்டான். விசுவாமித்திரன் என்பது  கருத்து.
வைகும்: தங்கும்.                                           39
 

378.‘இந்திரன் இடைந்தான்; உடைந்து ஓடினார்.
தந்திரம் படத் தானவர். வானவர்;
மந்தரம் இவள் தோள்எனின். மைந்தரோடு.
அந்தரம் இனி யாதுகொல். ஆண்மையே?
 

இந்திரன்    இடைந்தான் -  இந்திரன்  இவளுடன்  எதிர்க்கவந்து
பின்னிட்டு    ஓடினான்;   தானவர்   வானவர்   -   அரக்கர்களும்
தேவர்களும்;  தந்திரம்பட  உடைந்து  ஓடினர்  -  தமது சேனைகள்
அழிய. சிதறி  ஓடிவிட்டார்கள்;  இவள்  தோள்  மந்திரம் எனின் -
இவளது   தோள்கள்  மந்தர  மலை போன்றது என்றால்; மைந்தரோடு
ஆண்மை  இனி  அந்தரம்யாது  
- தக்க ஆண்களோடு ஆண்மையில்
என்ன பேதம் இருக்கிறது?

இடைந்தான்:     பின்னிட்டான் (பின்வாங்கினான்). உடைந்து: சிதறி.
தந்திரம்:   படை.  பட:  அழிய.  மந்திரம்:  மந்தரமாலை.   மைந்தர்:
வலிமையுடை  ஆண்கள்.  அந்தரம்: வேறுபாடு (பேதம்). பெண்ணாகிய
இவளுக்கும். வலிமைமிக்க ஆண்களுக்கும்  என்ன  வேறுபாடிருக்கிறது?
இந்திரன்  முதலானோரும் தோற்று ஓடும்படி  செய்த  இவளைப் பெண்
என நினைக்கலாமா.                                        40
 

379.‘கறங்கு அடல் திகிரிப்
   படி காத்தவர்
பிறங்கடைப் பெரியோய்!
   பெரியோரொடும்
மறம்கொடு. இத் தரை மன்னுயிர்
   மாய்த்து. நின்று.
அறம் கெடுத்தவட்கு ஆண்மையும்
   வேண்டுமே?
 

கறங்கு  அடல் திகிரிப்படி காத்தவர்-  எங்கும்  சுழன்று  வரும்
ஆணையாகிய   சக்கரம்  செலுத்தி  உலகைக்  காத்தவர்;  பிறங்கடை
பெரியோய்  
-   மரபில்   வந்த   பெரியோனே!;   ‘மறம்   கொடு
பெரியோரொடும்  
- பாவச் செயலை மேற்கொண்டு. பெரியோர்களாகிய
முனிவரோடும்; இத்தரை  மன்  உயிர்மாய்த்து  நின்று - இப்பூமியில்
உள்ள  உயிர்களை  எல்லாம்  அழித்து  நின்று; அறம் கெடுத்தவட்கு
ஆண்மையும்  வேண்டுமோ  
- அறத்தை அழித்தவளாகிய  இவளுக்கு
ஆண்வடிவம் வேண்டுவதோ!