பக்கம் எண் :

240பால காண்டம்  

கறங்குதல்:     சுழல்தல். திகிரி: ஆணையாகிய சக்கரம். படி: நிலம்.
காத்தவர்:  சூரிய  குலத்தரசர்கள். பிறங்கல்: விளங்கல்.   மறம்: பாவம்.
அடைபெரியோய்;  வினைத்தொகை. மன்னுயிர்: நிலைபெற்ற  உயிர்கள்.
மாய்த்து: அழித்து.’’ ஆண்மை: இங்கு ஆண்வடிவத்தை   உணர்த்திற்று.
சூரிய  குலத்தரசர்  மேலும்  விளக்கமுறவந்து  தோன்றிய   ராமனைப்
‘பெரியோய்’  என்றார்.  பெண்  உருவிலே இத்தனை  பேரழிவு செய்து
அறம்கெடுத்த     இவளுக்கு    ஆண்    உருவம்     வேண்டுமோ?
வேண்டுவதில்லை. என்பது கருத்து.                            41
 

380.‘சாற்றும் நாள் அற்றது எண்ணி. தருமம் பார்த்து.
ஏற்றும் விண் என்பது அன்றி. இவளைப்போல்.
நாற்றம் கேட்டலும் தின்ன நயப்பது ஓர்
கூற்றும் உண்டுகொல்? கூற்று உறழ் வேலினாய்!

 

கூற்று உறழ் வேலினாய்- எமனுக்கு ஒப்பான வேலேந்திய  வீரனே!;
சாற்றும்  நாள்  அற்றது எண்ணி
- முன் வினைப்படி ஏற்பட்ட வயது
தீர்ந்துவிட்டதை நினைத்து;  தருமம்  பார்த்து ஏற்றும் விண் என்பது
அன்றி  
-  அறப்பயனை  நினைத்து.  விண்ணுலகம் புகச் செய்தல்லாது;
இவளைப்  போல்
- புதிய எமனாகிய இவ்வரக்கியைப் போல; நாற்றம்
கேட்டலும்  தின்ன நயப்பதோர்
- மணம் தெரிந்தவுடன் உயிர்களைத்
தின்ன   விரும்புவதாகிய;   ஒரு  கூற்று  உண்டோ  -  ஒரு  எமன்
இவ்வுலகத்துண்டோ?

சாற்றும்:   ஏற்படுத்தும்.  நாள்:   ஆயுட்காலம்.   நாற்றம்:  மணம்.
கேட்டல்:  தெரிந்து கொள்ளல். ‘’நாற்றம் கேட்டலும் தின்ன   நயத்தல்’’
எமனுக்கு  உரிய குணமன்று. புது வழக்கமுடைய இவள் ‘புதிய   கூற்று’
எனப்பட்டாள். உறழ்தல்: பொருவுதல் (நிகராதல்). ‘உண்டோ’  என்பதில்
‘ஓ’  எதிர்மறைப் பொருளில் வந்தது. ‘இல்லை’ என்றபடியாம்.  சாற்றும்
நாள்: நியமித்த நாள் என்றபடி.                               42
 

381.

‘மன்னும் பல் உயிர் வாரி. தன் வாய்ப் பெய்து
தின்னும் புன்மையின் தீமை எதோ - ஐய!-
‘’பின்னும் தாழ் குழல் பேதைமைப் பெண் இவள்
என்னும் தன்மை. எளிமையின் பாலதே!

 

மன்னும்  பல் உயிர்வாரி-  உலகில்  நிலைபெற்றுள்ள பல  உயிர்
வகைகளையும்   அள்ளி  எடுத்து; தன்வாய் பெய்து தின்னும் - தனது
வாயில்  போட்டுத்   தின்னுகின்ற;   புன்மையின்  தீமை  எதோ  -
புன்மையான  தீமை  வேறு  எது  உண்டு;  ஐய! பின்னும் தாழ்குழல்
பேதைமைப்  பெண்   இவள்   என்னும்   தன்மை   
-   தலைவ!
அப்படியிருந்தும்  தாழ்ந்த  கூந்ததை  உடைய பேதைத்தன்மை வாய்ந்த
பெண்  இவள்  என்று  நினைக்கும்  தன்மை; எளிமையின் பாலதே -
இகழ்ச்சிக்கு உரியதாம். 

மன்னும்;   நிலைத்திருக்கும். வாய்ப்பெய்து: வாயில்கொட்டி. புன்மை:
புல்லியதன்மை.   தீமை:   தீயதொழில்.  ஐய:  தலைவனே.  தாழ்குழல்:
வினைத்