பக்கம் எண் :

  தாடகை வதைப் படலம்241

தொகை.   பேதைமை:  மனமிரங்கும் தன்மை. ‘பேதைமை என்பது
மாதர்க்  கணிகலம்’  என்பதை  நினைவு  கூர்க.  எளிமை:   இகழ்ச்சி.
இவளைப்  பெண்  என்பது இகழ்ச்சிக்குரியது என்பது கருத்து.  பாலது:
தன்மையது:  உயிர்களைக்  கொன்று  தின்பதைவிட.  தீயசெயல்  எது
உள்ளது?    இப்படிப்பட்டவளைப்    பெண்    என்று    சொல்வது
இகழ்ச்சிக்குரியதேயாகும்      என்பது       கருத்து.       எளிமை:
அறியாமையுமாம்.                                         43
 

382.‘ஈறு இல் நல் அறம் பார்த்து இசைத்தேன்; இவட்
சீறி நின்று இது செப்?பகின்றேன் அலேன்;
ஆறி நின்றது அறன் அன்று; அரக்கியைக்
கோறி’ என்று. எதிர் அந்தணன் கூறினான்.

 

ஈறில்   நல்   அறம்  பார்த்து  இசைத்தேன்  -  அழிவில்லாத
நல்லறத்தை    நோக்கியே   கூறினேன்;  இவள்  சீறி  நின்று  இது
செப்புகின்றேன் அலேன்
-  இவளைக் கோபித்து நின்று இதனை நான்
சொல்கிறேன்;   ஆறி  நின்றது  அறன்  அன்று  -  எனவே அரச
குலத்தவனாகிய நீ இவளது  தீச்செயலை  அறிந்தும்  இவ்வாறு தணிந்து
நிற்பது தருமம் அல்ல; அரக்கியைக் கோறி என்று எதிர் அந்தணன்
கூறினான்
-   இந்த   அரக்கியைக்  கொல்வாயாக என்று எதிர் நின்று
விசுவாமித்திரன் கூறினான்.

ஈறு:   முடிவு   (அழிவுமாம்).  நல்லறம்:  உயிர்களுக்கு    நன்மை
தரும்பொருட்டுச்   செய்யும்  அறம்.  இசைத்தல்:  சொல்லுதல்.    சீறி:
சினம்கொண்டு.   செப்புதல்:   சொல்லுதல்.  ஆறி:  தணிந்து.   கோறி:
கொல்லுதி.   கொலையிற்   கொடியாரை  வேற்தொறுத்தல்   பைங்கூழ்
களைகட்டதனோடு  நேர்  என்பது  குறளறம்.  உயிர்களுக்குத்   தீங்கு
செய்யும்  இவளைக்  கொல்வதுதான்  அறம்.  ஆறி  நின்றது    அறம்
அன்று என்பது கருத்து.                                     44
 

383.ஐயன் அங்கு அது கேட்டு. ‘அறன் அல்லவும்
எய்தினால். ‘’அது செய்க!’’ என்று ஏவினால்.
மெய்ய! நின் உரை வேதம் எனக் கொடு
செய்கை அன்றோ! அறம் செயும் ஆறு’ என்றான்.

 

ஐயன்  அங்கு அது கேட்டு- மேலோனாகிய ராமன் அங்கு  அந்த
முனிவன்  கூறியதைக்  கேட்டு; அறம் அல்லவும் எய்தினால் - அறம்
அல்லாதனவும்  ஒருக்கால்  வந்து  நேருமாயின்;  அதுசெய்க   என்று
ஏவினால்  
-  அதைச்  செய்க என்று எனக்குக்  கட்டளை  இடுவீரேல்;
மெய்ய! நின்  உரைவேதம்  எனக்கொடு  
-  மெய்ம்மை நெறி நின்ற
மேலோனே!   உமது  வாக்கை  வேத  வாக்காகக்  கொண்டு; செய்கை
அன்றோ  
- செய்வதே; அறம் செய்யும் ஆறு என்றான் - எனக்குரிய
அறம் என இராமபிரான் கூறினான்.