பக்கம் எண் :

  வேள்விப் படலம்253

சுரர்  தொழுது  இறைஞ்சற்கு ஒத்த- தேவர்களெல்லாம்  துதித்து
வணங்குவதற்கு  ஒத்ததாகிய;  தூநதி  யாவது  என்று  -  தூய  நதி
யாதாகும்  என்று; வரமுனி  தன்னை  அண்ணல்  வினவுற - சிறந்த
முனிவனாகிய    விசுவாமித்திரனைப்   பெருமைமிக்க  ராமன்  கேட்க;
மலருள்  வைகும்   பிரமன்   அன்றளித்த   
-   தாமரை  மலரில்
தங்கியிருக்கும்  பிரமன்  முன்பு பெற்ற; வென்றிப் பெருந்தகை குசன்
என்று  
-   வெற்றியை  உடைய  பெருந்  தன்மையன்  ஆகிய குசன்
என்று;  ஓதும் அரசர்  கோன்  -  பெரியோர்கள்  புகழ்ந்து  பேசும்
மன்னர் மன்னன்;  மனைவி  தன்பால் அளித்த மைந்தர் அருமறை
அனையார்  நால்வர்  
-  தன்  மனையாள்பால்  பெற்ற  பிள்ளைகள்
அரியமறைகளைப் போன்ற நால்வராவர்.

சுரர்:  தேவர்.  ஒத்த:  போன்ற.  தூ:   தூய்மை. வைகல்:  தங்கல்.
வினைவுறு:  கேட்க.  ஓதல்:  புகழ்ந்து  சொல்லுதல்.  மறை:    வேதம்.
அரசர்கோன்: மன்னர் மன்னன்.

தேவர்களும்   வணங்கும்  அந்த  நதி  யாவது  என   ராமபிரான்
விசுவாமித்திர   முனிவனைக்  கேட்க.  அதன்  வரலாறு    கூறுகிறான்
முனிவன். பிரமனுக்கு மகன் குசன் என்னும்  வேந்தன்.  அவன்  பெற்ற
மைந்தர்கள் நான்மறைக் கொப்பான நால்வர் என்பது கருத்து.       6
 

400.‘அவர்களின் குசநா பற்கே
   ஐ-இருபதின்மர் அம் சொல்
துவர் இதழ்த் தெரிவை நல்லார்
   தோன்றினர் வளரும் நாளில்
இவர் பொழில் - தலைக்கண் ஆயத்து
   எய்துழி. வாயு எய்தி.
கவர் மனத்தினனாய். அந்தக்
   கன்னியர் தம்மை நோக்கி.*
 

அவர்களின்   குசநாபற்கே  -  அந்த   நால்வருள்   ஒருவனான
குசநாபன் என்பனுக்கு;  ஐ  இரு  பதின்மர்  அம்சொல் துவர் இதழ்
தெரிவை  நல்லார்  தோன்றினர்  
-  அழகிய  சொற்களும்.  பவளம்
போன்ற  உதடும் கொண்ட பெண்கள் நூறு பேர் பிறந்தனராகி; வளரும்
நாளில் இவர் பொழில் தலைக்கண்  ஆயத்து  எய்துழி
- வளர்ந்து
வரும்     காலத்திலே    இப்பெண்கள்    சோலையிலே    தோழியர்
கூட்டத்துடன்  சென்றபோது;  வாயு எய்தி - காற்றுக் கடவுளான வாயு
தேவன் அங்கே வந்து; கவர்மனத்தினனாய் அந்தக் கன்னியர்தம்மை
நோக்கி   
-    கவரப்   பெற்ற   மனத்தை  உடையவனாகி  அந்தப்
பெண்களைப் பார்த்து.