பக்கம் எண் :

  வேள்விப் படலம்255

402.
 

‘சமிரணன் அகன்றதன்பின்.
   தையலார். தவழ்ந்து சென்றே
அமிர்து உகு குதலை மாழ்கி.
   அரசன் மாட்டு உரைப்ப. அன்னான்.
நிமிர்குழல் மடவார்த் தேற்றி.
   நிறை தவன் சூளி நல்கும்
திமிர் அறு பிரமதத்தற்கு
   அளித்தனன். திரு அனாரை.*
 

சமிரணன்  அகன்றதன் பின்-  வாயுதேவன் அங்கிருந்து  சென்று
பின்பு; தையலார்  தவழ்ந்து  சென்றே  -  அப்பெண்கள்  நிலத்தில்
தவழ்ந்தே சென்று; அரசன்  மாட்டு  மாழ்கி  அமிர்து உகு குதலை
உரைப்ப
-  தமது தந்தையான மன்னனிடம். அமுதம் போன்ற மழலை
மொழிகளால்   நிகழ்ந்த   செய்தியைக்   கூறி   மயங்க;  அன்னான்
நிமிர்குழல் மடவார்த்  தேற்றி  
- அரசன் வளர்ந்த கூந்தலையுடைய
அவ்விளம் பெண்களைத்  தேறுதல் செய்து; நிறைதவன் சூளி நல்கும்
திமிர்  அறு  பிரமதத்தற்கு  
-  நிறைந்த  தவத்தை  உடைய  சூளி
என்பவனது   மகனாகிய   மயக்கமற்ற பிரமதத்தன் என்பவனுக்கு; திரு
அனாரை  அளித்தனன்  
-  திருமகளுக்கு  ஒப்பான அப்பெண்களை
மணம் செய்து கொடுத்தான்.

சமிரணன்:  காற்றுத்தேவன். தையலார்: அழகுடைய பெண்கள். உகு
குதலை:   வினைத்தொகை.  குதலை: உருத்தெரியாச் சொற்கள். மாழ்கி:
மயங்கி.  ‘அரசன்மாட்டு’ இதில் மாட்டு என்பது ?ஏழனுருபாம். மடவார்:
இளம்   பெண்கள் தேற்றி: தேறுதல் செய்து (தேறு: பகுதி). நிறைதவன்:
வினைத்தொகை.  திமிர்: அகங்காரம் (மயக்கம்) இருள். திமிரம் என்பது
கடை   குறைந்தது.    பிரமதத்தன்:   பிரமனால்  கொடுக்கப்பட்டவன்
என்பது  பொருள்.  ‘’காற்றுக் கடவுளால் இடுப்பொடிக்கப்பட்ட அந்தப்
பெண்கள்   நூற்றுவரும்   தந்தையிடம்  சென்று முறையிட - ஆறுதல்
கூறித்தேற்றிப்பின்   அவர்களைப்   பிரமதத்தன்  என்பனுக்கு  மணம்
செய்து தந்தான்’ என்பது பொருள்.                            9
 

403.அவன் மலர்க் கைகள் நீவ.
   கூன் நிமிர்ந்து. அழகு வாய்த்தார்.
புவனம் முற்றுடைய கோவும்.
   புதல்வர் இல்லாமை. வேள்வி
தவர்களின் புரிதலோடும்.
   தகவு உற. தழலின் நாப்பண்.
கவன வேகத் துரங்கக்
   காதி வந்து உதயம் செய்தான்.*

 

அவன் மலர்க் கைகள் நீவ- பிரமதத்தன் அப்பெண்களைத்  தனது
மலர்க் கரத்தாலே நீவ (அவர்கள்); கூன் நிமிர்ந்து அழகுவாய்த்