பக்கம் எண் :

256பால காண்டம்  

தார்   -   கூன்  நீங்கி.  அழகு  பெற்றார்;  புவனம் முற்று உடைய
கோவும்  
-   உலகம்  முழுதுமுடைய மன்னனான குசநாபன்; புதல்வர்
இல்லாமை  
-  புத்திரப்பேறு  இல்லாமையாலே;  வேள்வி தவர்களின்
புரிதலோடும்  
-  மக்கட் பேற்றுக்குரிய வேள்வியைத் தக்க தவமுனிவர்
தம்முடன்  சேர்ந்து  செய்யவே;  தகவு  உறு அத்தழலின் நாப்பன் -
தகுதியுடைய   அந்த வேள்வித்தீயின் மத்தியில் இருந்து; கவன வேகத்
துரங்கம்  காதி  
-  வேகமுடைய  குதிரையைப் பெற்ற ‘காதி’ என்னும்
புத்திரன்; வந்து உதயம் செய்தான் - வந்து உதித்தான்.

மலர்க்கை:  மலர்  போன்ற கை (உவமைத் தொகை). கூன: முதுகின்
வளைவு.    நாப்பண்:     நடு.    துரங்கம்:   குதிரை.   செல்லுதலில்
விரைவுடையது  என்பதால்   கவன   வேகத்துரங்கம் என்றார். உதயம்:
தோற்றம்;   பிரமதத்தன்   தனது    கைகளால்   நீவ.  அப்பெண்கள்
கூன்நீங்கி   அழகு  பெற்றனர்.   குசநாபன்.   தனக்கு  நூறுபெண்கள்
இருந்தும்   ஆண்மகவில்லையே  என்பதால்.   மக்கள்   பேறு  கருதி
வேள்வி   செய்ய.   அந்த   வேள்வித்தீயின்  மத்தியிலே   ‘’  காதி’’
என்பவன்   வந்து   தோன்றினான்  என்க.  அரசர்க்குரிய    சிறப்புத்
தோன்றப்   பிறந்தான்  என்பதைக்  ‘கவன  வேகத்  துரங்கத்   காதி’
என்பதுணர்த்தி   நின்றது.   ‘’வந்து  உதயம்  செய்தான்’’.   தோன்றி
உதித்தான் என்க.                                          10
 

404.‘அன்னவன் தனக்கு. வேந்தன்.
   அரசொடு முடியும் ஈந்து.
பொன்னகர் அடைந்த பின்னர்.
   புகழ்மகோதயத்தில் வாழும்
மன்னவன் காதிக்கு. யானும்.
   கவுசிகை என்னும் மாதும்.
முன்னர் வந்து உதிப்ப. அந்த
   முடியுடை வேந்தர்வேந்தன்.*

 

அன்னவன்   தனக்கு   வேந்தன்   -   அந்தக்  காதி  என்னும்
பெயருடைய   அரச  குமாரனுக்கு.   தந்தையான குசநாபன்; அரசொடு
முடியும்   ஈந்து  
-   ஆட்சியுடன்   அதற்குரிய  மணிமுடியும்  தந்து;
பொன்னகர் அடைந்த  பின்னர்  
-  விண்ணுலகு சென்றபின்பு; புகழ்
மகோயத்தில் வாழும் காதிக்கு
- புகழ்மிகுந்த மகோதயம் என்ற நகரில்
அரசு  புரிந்து  வாழ்ந்து  வந்த  காதிக்கு;  யானும் கவுசிகை என்னும்
மாதும்  முன்னர்  வந்து உதிப்ப
- யானும் எனக்கு முன்பு வந்துதித்த
கவுசிகை  என்ற பெண்ணும் வந்து பிறக்க; அந்த முடி உடை வேந்தர்
வேந்தன்  
-   மணிமுடி   புனைந்த  அந்த மன்னர் மன்னனான காதி
வேந்தன்.

இது  குளகப்பாட்டு.  அடுத்த  பாட்டுடன்  பொருள்  முடியும். முடி
மகுடம்.    பொன்  நகர்:  சுவர்க்கம்.  ‘பொன்’  உயர்வைக்  குறிக்கும்
உபசாரச்   சொல்  ‘காதிக்  கியானும்’ இதில் ‘கி’ குற்றியலிகரம். மாதர்:
அழகு.    பண்பாகு  பெயராய்ப் பெண்களை உணர்த்தும். ‘எம்முனாள்’
எனப்   பின்னும்   கூறுவது   கொண்டு.  ‘முன்னர்  வந்து   உதிப்ப’
எனப்பொருள் கூறப்பட்டது.