பக்கம் எண் :

258பால காண்டம்  

   
 

போதுக. நதியாய்’’ என்னா.
   பூமகன் உலகு புக்கான்.*
 

காதலன்   சேணின்  நீங்க  -   கணவனான   இரிசிகன்  செய்த
தவப்பலனால்  வான்வழி  செல்வதற்குத் தன்னை விட்டு நீங்க; கவுசிகை
தரித்தல்   ஆற்றாள்   
-  என்  முன்னவளான  கவுசிகை  பொறுக்க
இயலாதவளாகி;  விழு  நதி  வடிவமாகி  -  பெரிய  ஒரு நதிவடிவம்
எடுத்துக்கொண்டு;  மீது  உறப்படரல்  உற்றால்  -  மேலே  போகப்
புறப்பட்டாள்;  மாதவர்க்கு அரசு நோக்கி- முனிவர்களுக்கு அரசனான
இரிசிகன் அதனைப் பார்த்து; மாநிலத்து உறுகண் நீக்க- நிலவுலகத்துத்
துன்பத்தைப் போக்க; நதியாய்ப் போதுக என்னா - ஆறாகப் பெருகிச்
செல்வாயாக  என்று (கூறி); பூமகன் உலகு புக்கான் - பிரமன் உலகைச்
சென்றடைந்தான்.

காதலன்:  கணவன்.  சேண்:  உயர்வு  இங்கு வானைக் குறிக்கும்).
தரிக்கல்:  பொறுத்தல்.  மீது:  உயர்வழி.  படரல்:  நகர்தல். உறுகண்:
துன்பம்.   போதுக:  போவாயாக.  வியங்கோள்வினைமுற்று.  பூமகன்:
மலரில் இருப்பவன். புக்கான்: புகுந்தான்.

கணவன்   விண்ணுலகேக.  பொறுக்கலாற்றாத  கவுசிகை  நதியாகி
மேலே  தொடர.  இரிசிகன் உலகத்துத் துன்பம் நீக்க. ஆறாகச் செல்க
எனக்கூறி. பிரமனுலகு சென்றான் என்க. என்னா: என்று கூறி. செய்யா
என்ற வாய்பாட்டு வினையெச்சம்.                             13
 

407.‘எம் முனாள் நங்கை இந்த
   இரு நதி ஆயினாள்’ என்று.
அம் முனி புகல. கேளா.
   அதிசயம் மிகவும் தோன்ற.
செம்மலும் இளைய கோவும்.
   சிறிது இடம் தீர்ந்த பின்னர்.
‘மைம் மலி பொழில் யாது?’ என்ன.
   மா தவன் கூறலுற்றான்;
 

எம்முனாள்  நங்கை-  எனது  தமக்கையாகிய  கவுசிகை  என்பாள்;
இந்த  இரு  நதி  ஆயினாள்  
- இந்தப் பெரிய நதிவடிவம் ஆனாள்;
என்று அம்முனி புகலக்கேளா
- என்று அந்த விசுவாமித்திர முனிவன்
சொல்லக் கேட்டு;  செம்மலும்  இளைய  கோவும்  - தலைமகனாகிய
இராமனும். இளையவனாகிய  இலக்குவனும். அதிசயம் மிகவும் தோன்ற
-  ஆச்சரியம்  மிக  உண்டாக;  சிறிது  இடம்  தீர்ந்த  பின்னர் -
சிறிதுதூரம்    நடந்துசென்ற   பிறது  (அங்கு  காட்சியளித்த  சோலை
ஒன்றைக்  கண்டு);  மைம்மலி   பொழில்யாது   என்ன  -  மேகம்
கவிந்துள்ள   இந்தச்  சோலை  யாவது என்று கேட்க; மாதவன் கூறல்
உற்றான்    
-    சிறந்த   தவமுனியாகிய   விசுவாமித்திரன்   கூறத்
தொடங்கினான்.