பக்கம் எண் :

260பால காண்டம்  


 

ஆர்?’’ என்பான்; அமல மூர்த்தி
   கருதியது அறிதல் தேற்றாம்; 
ஈர்-ஐம்பது ஊழிக்காலம் இருந்தனன்
   யோகத்து. இப்பால்.
 

பாரின்பால்  விசும்பின் பாலும்-  மண்ணுலகிலும்  விண்ணுலகிலும்;
பற்று   அறப்படிப்பது   
-   (பிறப்புக்குக்  காரணம்  ஆன)  உலகப்
பற்றுக்கள்  நீங்க.  சொல்லப்  பெறுவது;  அன்னான் பேர் என்பார் -
அத்திருமாலின்   பெயர்களே   என்று  சொல்லிய  கோசிகன்  மேலும்;
அவன்  செய்   மாயப்   பெரும்பிணக்கு  
-  அப்பரமன்  செய்யும்
மாயமாகிய  பெருங்கலகத்தை;  ஒருங்கு  தேர்வார் ஆர் என்பான் -
ஒரு சேரத்தெளிந்து  தேர்பவர்  யாரென்று  சொல்லும்  தெளிவுடையவர்
எவரும்   இலர்   என்று   கூறிவிட்டு;   அமலமூர்த்தி  கருதியது  -
களங்கமற்ற   அப்பரமன்  நினைத்துள்ளதை;  அறிதல்  தேற்றாம்  -
அறிந்து  சொல்லும்  தெளிவில்லேன்; ஈரைம்பது ஊழிக்காலம் - நூறு
யுகம்வரையும்;  இருந்தனன்  யோகத்து  இப்பால்  -  இவ்விடத்திலே
யோகத்தில் இருந்தான் என்றான்.

பார்:   நிலம். விசும்பு: வான். ‘பால்’ இரண்டிடத்தும்  ஏழனுருபுகள்.
பற்று:  ஆசை  (முதல்நிலைத் தொழிற்பெயர்). பெரும்பிணக்கு:  இன்ப
துன்பங்களைத்  துய்க்கச்  செய்யும்  பெருங்கலகம் என்பர்.  என்பாம்:
என்று   சொல்வோம்.   மூர்த்தம்:  வடிவம்.  அமலம்:   குற்றமற்றது.
தேற்றாம்:   தேறமாட்டோம்.   ஊழி:   யுகம்   (பேரளவைக்  காலம்).
ஈரைம்பான்:  இரண்டு  ஐம்பது  (எனவே  நூறு).  இப்பால்: இவ்விடம்.
இருந்தனன்: இருந்தான்.

விண்ணும்   மண்ணும்  பற்றுக்கள்  நீங்கச் சொல்லுவது அப்பரமன்
பெயர்களே.  உலகத்தவரை  இன்ப.   துன்பங்களை  அடையச் செய்ய.
அவன் செய்யும் மாயப் பிணக்கை எல்லாம்  தேர்ந்து  தெளிவார் யார்?
அத்தகைய  பெருமான்  ஒரு  நூறு  யுகங்கள்  இவ்விடம்  யோகத்தில்
இருந்தான் என்க.                                          16
 

410.‘ஆனவன் இங்கு உறைகின்ற அந்நாள்வாய்
ஊனம் இல் ஞாலம் ஒடுங்கும் எயிற்று ஆண்
ஏனம் எனும் திறல் மாவலி என்பான்.
வானமும் வையமும் வவ்வுதல் செய்தான்;
 

ஆனவன்  இங்கு  உறைகின்ற  அந்நாள்வாய்  -    அத்தகைய
திருமால்   இங்கு  வாழ்ந்து  வருகின்ற  அந்தக்  காலத்திலே;  ஊனம்
இல்ஞாலம் ஒடுங்கும்  எயிற்று  
-  குற்றமற்ற  இவ்வுலகம்  ஒடுங்கத்
தகுந்த   இரு  பற்களை   உடைய;   ஆண்  ஏனம் எனும் திறல் -
ஆதிவராகத்தோடு ஒப்பு  கூறத்தக்கவன்  இவனே  என்னுமாறு; மாவலி
என்பான்
- மகா பலி  என்னும் பெயருடைய  அசுரர்குலத்  தலைவன்;
வானமும்  வையமும்   
-   விண்ணுலகத்தையும்.  மண்ணுலகத்தையும்.
வவ்வுதல் செய்தான்- கவர்ந்து தனக்குரியதாக்கிக் கொண்டான்.