பக்கம் எண் :

  வேள்விப் படலம்263

அற்புத   ஞானம்  வாய்ந்த  மேலோர்களே  அறிந்து கொள்ளத் தகுந்த
தான;  தன் சிற்பதம் ஒப்பது ஓர் - தனது ஞான நிலைக்கு ஒப்பதாகிய
ஒரு;  மெய்க்கொடு  சென்றான்  -  வடிவத்தை  எடுத்துக்  கொண்டு
மாவலியின் வேள்விச் சாலைக்குச் சென்றான்.

முப்புரி    நூல்: பூணூல். புரிதல்: திரித்தல். முஞ்சி: ஒரு வகைப்புல்.
பிரமச்சாரிகள்  அணிய  வேண்டிய   அரை  நாண்  என்பர்.  ‘அனல்
படுகையன்’   பிரமசரிய    நோன்புக்குரிய    சமிதாதானம்   என்னும்
வேள்வியைச் செய்யும் பழக்கத்தால்  தோன்றிய  அவ்வனல் தோன்றும்
கையை  உடையவன்  என்பது  பொருள். ‘கொடு’  கொண்டு என்பதன்
இடைக்குறை.   விஞ்சை   கற்பதொர்   நா:  வேத   மந்திரங்களாகிய
வித்தையை எப்போதும் சொல்லிக் கொண்டிருக்கும் நாவாகும்.       21
 

415.‘அன்று அவன் வந்தது அறிந்து. உலகு எல்லாம்
வென்றவன். முந்தி வியந்து எதிர் கொண்டான்;
‘’நின்தனின் அந்தணர் இல்லை; நிறைந்தோய்!
என்தனின் உய்ந்தவர் யார் உளர்?’’ என்றான்.

 

அன்று  அவன் வந்தது அறிந்து -   அன்று   அந்த   வாமனன்
வந்ததை  அறிந்து;  உலகு  எல்லாம் வென்றவன் - உலகையெல்லாம்
வென்றவனான மாவலி; முந்தி விரைந்து எதிர் கொண்டான் - முற்பட
விரைந்து    சென்று    எதிர்கொண்டு    அழைத்து  வந்தான்.  பின்பு;
நிறைந்தோய்  
-  நிறைந்த  தவம்  உடைய  மேலோனே;  நின்தனில்
அந்தணர்   இல்லை  
-  உன்னைவிடச் சிறந்த அந்தணர் வேறில்லை;
என்தனின் உய்ந்தவர்  யார்  இனி  என்றான்
- என்னைவிட உய்வு
பெற்றவர் இனி இங்கு யார் இருக்கிறார்கள் என்றான்.

உலகெல்லாம்     வென்றவன்: மகாபலிச் சக்கரவர்த்தி. முந்தி: முன்.
நின்தன்  என்தன்  இவைகளில்  ‘தன்’  இரண்டும்  ‘அசைகள்’  ‘’எதிர்
கொண்டான்’’  எதிர்  கொண்டு. அழைத்து வந்தான் என்பது  பொருள்.
நிறைந்தோய்:  தவத்தாலும்.  தன்மையாலும்   நிறைந்தவன்   என்பதை
உணர்த்தும்.   வாமனன்   வந்ததை  அறிந்த   மகாபலி  எதிர்சென்று
அழைத்து  வந்து  நிறை  தவத்தோய்   நின்னில்   உயர்ந்தாருமில்லை.
என்னில் உய்ந்தாருமில்லை எனக் கூறி மகிழ்ந்தான் என்க.         22
 

416.‘ஆண்தகை அவ் உரை கூற. அறிந்தோன்.
‘’வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி.
நீண்ட கையாய்! இனி. நின்னுழை வந்தோர்
மாண்டவர்; அல்லவர் மாண்பு இலர்’’ என்றான்.
 

ஆண்தகை  அவ்வுரை கூற  -  வீரம் மிக்க மாவலி அவ்விதமாகச்
சொல்லவே;    அறிந்தோன்    -    அனைத்தும்   அறிந்தவனாகிய
அவ்வாமனமூர்த்தி;  வேண்டினர் வேட்கையின் மேற்பட வீசி நீண்ட
கையாய்
- வேண்டி  வந்தவர்களது  விருப்பத்துக்கு மேற்படும்படி வாரி
வழங்கி